திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3334 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3334திருவாய்மொழி || (6-10–உலகம் உண்ட பெருவாயா) - ((வந்தாய்போலே) தம்முடைய விச்லேஷ வ்யஸநத்தைக் கனக்க அருளிச் செய்கிறார்.) 9
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே! செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே! சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே! அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9
பதவுரை Show / Hide
vandhai poalae vaaraadhai,வந்தாய் போலே வாராதாய் - கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே!
vaaraadhai pol varuvaane,வாராதாய் போல் வருவானே - எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே!
sen thamarai kan,செம் தாமரை கண் - செந்தாமரைபோன்ற திருக்கண்களையும்
sem kani vaay,செம் கனி வாய் - செங்கனி போன்ற திருப்பவளத்தையும்
naal thol,நால் தோள் - நான்கு திருத்தோள்களையுமுடைய
amudhae,அமுதே - பரமபோக்யனே!
enadhu uyire,எனது உயிரே - எனக்கு உயிரானவனே!
sindhaamanigal pagar,சிந்தாமணிகள் பகர் - சிறந்த ரத்னங்களின் ஒளியான
allai pagal sei,அல்லை பகல் செய் - இரவையும் பகலாக்குமிடமானது
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே!
antho,அந்தோ - ஐயோ!
una paadham,உன பாதம் - உனது திருவடிகளே
adiyen,அடியேன் - அடிமைச்சுவடறிந்த நான்
iraiyum akala killeen,இறையும் அகல கில்லேன் - ஒரு க்ஷணகாலமும் பிரிந்திருக்க வல்லேனல்லேன்