| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3334 | திருவாய்மொழி || 6-10–உலகம் 9 | வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே! செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே! சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே! அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9 | vandhai poalae vaaraadhai,வந்தாய் போலே வாராதாய் - கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே! vaaraadhai pol varuvaane,வாராதாய் போல் வருவானே - எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே! sen thamarai kan,செம் தாமரை கண் - செந்தாமரைபோன்ற திருக்கண்களையும் sem kani vaay,செம் கனி வாய் - செங்கனி போன்ற திருப்பவளத்தையும் naal thol,நால் தோள் - நான்கு திருத்தோள்களையுமுடைய amudhae,அமுதே - பரமபோக்யனே! enadhu uyire,எனது உயிரே - எனக்கு உயிரானவனே! sindhaamanigal pagar,சிந்தாமணிகள் பகர் - சிறந்த ரத்னங்களின் ஒளியான allai pagal sei,அல்லை பகல் செய் - இரவையும் பகலாக்குமிடமானது thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே! antho,அந்தோ - ஐயோ! una paadham,உன பாதம் - உனது திருவடிகளே adiyen,அடியேன் - அடிமைச்சுவடறிந்த நான் iraiyum akala killeen,இறையும் அகல கில்லேன் - ஒரு க்ஷணகாலமும் பிரிந்திருக்க வல்லேனல்லேன் |