Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3334 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3334திருவாய்மொழி || 6-10–உலகம் 9
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9
vandhai poalae vaaraadhai,வந்தாய் போலே வாராதாய் - கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே!
vaaraadhai pol varuvaane,வாராதாய் போல் வருவானே - எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே!
sen thamarai kan,செம் தாமரை கண் - செந்தாமரைபோன்ற திருக்கண்களையும்
sem kani vaay,செம் கனி வாய் - செங்கனி போன்ற திருப்பவளத்தையும்
naal thol,நால் தோள் - நான்கு திருத்தோள்களையுமுடைய
amudhae,அமுதே - பரமபோக்யனே!
enadhu uyire,எனது உயிரே - எனக்கு உயிரானவனே!
sindhaamanigal pagar,சிந்தாமணிகள் பகர் - சிறந்த ரத்னங்களின் ஒளியான
allai pagal sei,அல்லை பகல் செய் - இரவையும் பகலாக்குமிடமானது
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே!
antho,அந்தோ - ஐயோ!
una paadham,உன பாதம் - உனது திருவடிகளே
adiyen,அடியேன் - அடிமைச்சுவடறிந்த நான்
iraiyum akala killeen,இறையும் அகல கில்லேன் - ஒரு க்ஷணகாலமும் பிரிந்திருக்க வல்லேனல்லேன்