Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3337 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3337திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பிரானே! உன் திருவடிகளையே சரணமாகப்பற்றின வென்னை இந்திரியங்களை யிட்டு நலியப் பார்க்கிறாயே! இது தகுதியோ? என்கிறார்.) 1
உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1
எண்இலாபெரு மாயனே,Ennilaaperu Maayane - அளவிடமுடியாத ப்ரக்ருதி தத்வத்தை உபகரணமாக வுடையவனே!
இமையோர்கள் ஏத்தும்,Imayorkal eththum - தேவர்களாலே துதிக்கப்படுபவனும்
உலகம் மூன்று உடை,Ulagam moonru udai - மூவுலகங்களையும் சேஷமாசவுடையனுமான
அண்ணலே,Annale - ஸ்வாமியே!
அமுதே,Amuthe - பரம போக்யனே
அப்பனே,Appane - மஹோபகாரங்கள் செய்பவனே!
என்னை ஆள் வானே,Ennai aal vaane - என்னை நிர்வஹித்துக் கொண்டு போருமவனே!,
என்னை,Ennai - அடியனே
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி,Ul nilaaviya aivaraal kumaithiitri - உள்ளே நிரந்தரவ லீஸம் பண்ணுகின்றபஞ்சேந்திரியங்களாலும் நலிவுறும்படி பண்ணி
உன் பாதபங்கயம்,Un paathapankajam - உனது திருவடித்தாமரைகளை
நண்ணிலா வகையே,Nannilaa vagaiye - கிட்டாதபடியாகவே
இன்னும் நலிவான்,Innum nalivaan - இன்னமும் ஹிம்ஸிப்பதாக
எண்ணுகின்றாய்,Ennungindraal - எண்ணியிருக்கிறாய் போலும்