| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3338 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (எலியெலும்பனான வென்னை இந்திரியங்களாலே நோவுபடுத்தி அந்த நோவை அறிவிக்க முடியாதபடி கடக்க நிற்கிறாயே! என்கிறார்.) 2 | என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட் டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய் கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2 | கன்னலேஅமுதே,Kannale Amuthe - பரமபோக்யனே! கார் முகில் வண்ணனே,Kaar mugil vannaane - காளமேக நிறத்தனே! கடல் ஞாலம் காக்கின்ற,Kadal gnaalam kaakkindra - கடல் சூழந்த வுலகங்களை ரக்ஷித்தருள்கின்ற மின்னு நேமியினாய்,Minnu nemiyinaai - உஜ்ஜ்வலமான திருவாழியை யுடையவனே! வினையேனுடைய வேதியனே,Vinaiyenudaiya vedhiyane - பாவியேனான என்திறத்தாலே எட்டாத படி வேத வேத்யனாயிருக்குமவனே! என்னை ஆளும் வன் கோ ஒர் ஐந்து இவை பெய்து,Ennai aalum van ko ooRainthu ivai peithu - என்னை அடிமை கொள்ளுகிற கொடிய அரசர்கள் போன்ற இந்த பஞ்சேந்திரியங்களை ஏவி வைத்து இராப் பகல்,Iraap pagal - இரவும் பகலும் மோது வித்திட்டு,Modu vithittu - பிடிக்கச் செய்து நான்உன்னை அணுகாவகை,Naan unnai anugaavakai - நான் உன்னைக் கிட்டாதபடி செய்து போதி கணிடாய்,Seithu podhi kanidaai - பண்ணிப்போருகிறாய். |