Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3338 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3338திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (எலியெலும்பனான வென்னை இந்திரியங்களாலே நோவுபடுத்தி அந்த நோவை அறிவிக்க முடியாதபடி கடக்க நிற்கிறாயே! என்கிறார்.) 2
என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2
கன்னலேஅமுதே,Kannale Amuthe - பரமபோக்யனே!
கார் முகில் வண்ணனே,Kaar mugil vannaane - காளமேக நிறத்தனே!
கடல் ஞாலம் காக்கின்ற,Kadal gnaalam kaakkindra - கடல் சூழந்த வுலகங்களை ரக்ஷித்தருள்கின்ற
மின்னு நேமியினாய்,Minnu nemiyinaai - உஜ்ஜ்வலமான திருவாழியை யுடையவனே!
வினையேனுடைய வேதியனே,Vinaiyenudaiya vedhiyane - பாவியேனான என்திறத்தாலே எட்டாத படி வேத வேத்யனாயிருக்குமவனே!
என்னை ஆளும் வன் கோ ஒர் ஐந்து இவை பெய்து,Ennai aalum van ko ooRainthu ivai peithu - என்னை அடிமை கொள்ளுகிற கொடிய அரசர்கள் போன்ற இந்த பஞ்சேந்திரியங்களை ஏவி வைத்து
இராப் பகல்,Iraap pagal - இரவும் பகலும்
மோது வித்திட்டு,Modu vithittu - பிடிக்கச் செய்து
நான்உன்னை அணுகாவகை,Naan unnai anugaavakai - நான் உன்னைக் கிட்டாதபடி
செய்து போதி கணிடாய்,Seithu podhi kanidaai - பண்ணிப்போருகிறாய்.