| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3339 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (ஆழ்வீர்! உம்மை நான் இந்த ப்ரக்ருதியிலே வைத்தது ஒரு ப்ரயோஜனத்துக்காகக் காணும்’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக, பிரானே! என்னை இப்படி நலிவித்து என்ன ப்ரயோஜனம் கொள்ளப் பார்க்கிறாய்? என்கிறார்.) 3 | வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச் சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3 | ஆகி ஆகி,Aagi aagi - காரணபூதனாய்க் கொண்டு அகல் இடம் படைத்து,Akal idam padaiththu - விஸ்தாரமான ஜகத்தை ஸ்ருஷ்டித்து உண்டு,Undu - (பிரளயத்திலே) வயிற்றிலே வைத்து நோக்கி உமிழ்ந்து,Umizhndhu - பிறகு வெளிப்படுத்து (ஒரு கால்) அளந்து இடந்திட்ட,Idandhitta - (வரஹரூபியாய்) இடந்தவனே! சோதி நீள் முடியாய்,Sothi neel mudiyai - உஜ்ஜ்வலமாய் நீண்ட திருவபிஷேகத்தை யுடையவனே! தொண்டனேன் மது சூதன்னே!,Thondan en madhu soodhanne! - என்னை யீடுபடுத்திக் கொண்ட மதுசூதனனே விணையேனே,Vinaiyene - பாவியான வென்னை வேதியான நீற்கும் ஐவரால்,Vedhiyanaa neerkum aivaraal - இடைவிடாதே நலியும் பஞ்சேந் திரியங்களாலே மோதுவித்து உன் திருவடி சாதியாவகை,Modhuviththu un thiruvadi saadhiyaavakai - உன் திருவடிகளைக் கிட்டாதபடி நீ தடுத்து என் பெறுதி,Nee thaduththu en perudhi - நீ தடை செய்து என்ன பயன் பெற்றாயாகிறாய்; அந்தோ,Andho - ஐயோ! |