| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3341 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (நான் ஒரு ஸமாதானம் செய்து கொள்ள முடியாதபடி விஷயங்களாலும் இந்திரியங்களாலும் என்னை ஹிம்ஸிப்பவர்களும் ஐவர்; ஹிம்ஸைக்குப் பரிகரமான வஸ்துக்களும் ஐந்து என்கிறார்._ 5 | தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம் வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5 | அடல் ஆழி ஏந்தி,Adal aazhi endhi - சேசு பொருந்திய திருவாழியைக் கையிலேதாங்கி அசுரர் வன்குலம்,Asurar van kulam - அசுரர்களின் பிரபலமான கூட்டங்களை மருங்கு வேர் அறுத்தாய்,Marungu ver aruththai - பக்கவேரோடே அறுத்தவனே! ஓ விண்ணுளார் பெருமானே,O vinnular perumane - ஓ நித்யஸூரிதாதனே! தீர் மருந்து இன்றி,Theer marundhu indri - மாற்று மருந்தில்லாதபடி (அபரிஹார்யமாக) ஐந்து நோய் அடும்,Aindhu noi adum - ஐந்து வகைப்பட்ட சப்தாதி விஷயங்களாகிற நோய்களாலே முடிக்கக்கடவதான செக்கில் இட்டு,Sekkil ittu - (சரீரமாகிற) செக்கிலே தள்ளி திரிக்கும் ஐவரை,Thirikkum aivarai - நெருக்கிற பஞ்சேந்திரியங்களை நேர் மருங்கு உடைத்தா அடைத்து,Ner marungu udaiththa adaitthu - நேரிலும் பக்கங்களிலுமாக நிறுத்தி நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,Negizhppan okkinraai - நெகிழ விடுவான் போலேயிரா நின்றாய்; இனி மருந்து ஆகுவார்யார்,Ini marundhu aaguvaar yaar - இனி மரந்தாகக் கூடியவர் யார்? |