| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3343 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (அடியார்கட்கு அருந்தொழில் செய்தும் அபேக்ஷிதம் தலைக்கட்டுவதையே இயல்வாக வுடையனான உன்னுடைய கருணையில்லாயாகில் பிரபரமான இந்திரியங்களை நான் வெல்லுவதென்றொரு பொருளுண்டோ வென்கிறார்.) 7 | ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்? அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7 | அன்று,Andru - பண்டொரு காலத்திலே தேவர் அசுரர்,Devar Asurar - தேவர்களும் அசுரர்களும் வாங்க,Vaang - வலிக்கும்படியாக அலைகடல்,Alaikadal - அலையெறிகிற கடலிலே அரவம் அளாவி,Aravam Alaavi - வாஸூதி யென்கிற பாம்பைச் சுற்றி ஓர் குன்றம்,Or Kunram - மந்தர மலையை வைத்த எந்தாய்,Vaittha Endhaay - நாட்டின் பெருமானே! கொடியேன் பருகு இன் அமுதே,Kodiyen Parugu Inn Amudhe - பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே! உன்திரு அருள் இல்லை ஏல்,Unthiru Arul Illai Ael - உன்னுடைய கருபை இல்லை யாகில், ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஒர் ஐவர்வன் கயவரை,Ondru Solli Oruthinil Nirgiladha Or Aivarvan Kayavarai - ஆறியிருக்கமாட்டாத பஞ்சேந் திரியங்களாகிற பிரபலக் கொடியவர்களை யான் என்று வெல் கிற்பன்,Yaan Endru Vel Kirpan - அடியேன் என்றைக்கு வெல்ல வல்லவனாவேன்? |