Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3344 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3344திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (எனக்குண்டான ப்ரக்ருதி ஸம்பந்தத்தை யறுத்து, மனமொழி மெய்களாலே உன்னையே நான் நிரந்தரமாக அநுபவிக்கும்படி பண்ணி யருளவேணுமென்கிறார்.) 8
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8
என் அம்மா,En Amma - என் ஸ்வாமியே!
என் கண்ணா,En Kanna - எனக்கு எளியவனானவனே!
இமையோர் தம் குலம்; முதலே,Imayor Tam Kulam; Mudhale - நிக்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனே!
ஒர் ஐவர்,Or Aivar - சப்தாதி விஷயங்கள் ஐந்தும்
இன் அமுது என தோன்றி,Inn Amudhu En Thondri - இனிய அமிருதம் போல் போக்யமாய்த் தோன்றி
யாவரையும் மயக்க,Yaavaraiyum Mayakka - எப்படிப்பட்டவர்களையும் மயக்கும் படியாக
நீ வைத்த முன்னம் மாயம் எல்லாம்,Nee Vaittha Munnam Maayam Ellam - நீ உண்டாகி வைத்த அநாதியான ஸம்ஸாரத்தை யெல்லாம்
முழுவேர் அரிந்து,Muzhuver Arindhu - வாஸநையோடே போக்கி
என்னை,Ennai - அடியனே
உன் சின்னமும் திரு மூர்த்தியும்,Un Chinnamum Thiru Moorthiyum - உனது அஸாதாரண லக்ஷ்ணங்களான சங்கசக்ராதிகளையும் திவ்யமங்கள் விக்ரஹத்தையும்
சிந்தித்து,Sindhitthu - நெஞ்சார நினைத்து
ஏத்தி,Etti - வாயாரத் துதித்து
கை தொழ,Kai Thoza - கையாரத் தொழும் படியாகப் பண்ணி
எனக்கே அருள்,Enakke Arul - எனக்கென்று விசேக்ஷித்த க்ருபையைப் பண்ண வேணும்.