Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3345 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3345திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (விஷயங்களிலே ஆத்மாவைத் தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாத படி பண்ணவேணும் என்று இரக்கிறார்.) 9
குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9
நிலம் முதல்,nilam mudhal - பூமி முதலாக
இனி எவ்வுலகுக்கும்,ini evvulakkum - மற்றும் ஸகல லோகங்களுக்கும்
நிற்பன செல்வன என,nirpana selvan ena - ஸ்தாவர ஜங்கம ரூபமான
பொருள் பல,porul pala - பொருள்கள் பல வற்றையும்
முதல் படைத்தாய்,mudhal padaitthaai - முன்னம் படைத்தவனே!
என் கண்ணா,en kanna - என் கண்ணனே!
என் பரம் சுடரே,en param sudare - என் பரஞ்சோதிவடிவனே!,
குலம்,kulam - குலத்தை
முதல் அடும்,mudhal adum - வேரோடே முடிக்கவல்ல
தீவிகளை,theevigalai - பாபங்களை விளைக்கவல்ல
கொடு வன்குழியினில்,kodu vankuzhiyinil - (சப்தாதி விஷயங்களாகிற) படுகுழியதிலே
வீழ்க்கும் ஐவரை,veezhkum aivarai - தள்ளக்கூடிய பஞ்சோத்திரியங்களை
வலம் முதல் கெடுக்கும் வலமே,valam mudhal kedukum valame - மூல பலத்தோடே முடிக்கும் படியான மிடுக்கை
தந்தருள் கண்டாய்,tandarul kandai - அநுக்ரஹித்தருள வேணும்.