| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3345 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (விஷயங்களிலே ஆத்மாவைத் தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாத படி பண்ணவேணும் என்று இரக்கிறார்.) 9 | குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய் நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள் பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9 | நிலம் முதல்,nilam mudhal - பூமி முதலாக இனி எவ்வுலகுக்கும்,ini evvulakkum - மற்றும் ஸகல லோகங்களுக்கும் நிற்பன செல்வன என,nirpana selvan ena - ஸ்தாவர ஜங்கம ரூபமான பொருள் பல,porul pala - பொருள்கள் பல வற்றையும் முதல் படைத்தாய்,mudhal padaitthaai - முன்னம் படைத்தவனே! என் கண்ணா,en kanna - என் கண்ணனே! என் பரம் சுடரே,en param sudare - என் பரஞ்சோதிவடிவனே!, குலம்,kulam - குலத்தை முதல் அடும்,mudhal adum - வேரோடே முடிக்கவல்ல தீவிகளை,theevigalai - பாபங்களை விளைக்கவல்ல கொடு வன்குழியினில்,kodu vankuzhiyinil - (சப்தாதி விஷயங்களாகிற) படுகுழியதிலே வீழ்க்கும் ஐவரை,veezhkum aivarai - தள்ளக்கூடிய பஞ்சோத்திரியங்களை வலம் முதல் கெடுக்கும் வலமே,valam mudhal kedukum valame - மூல பலத்தோடே முடிக்கும் படியான மிடுக்கை தந்தருள் கண்டாய்,tandarul kandai - அநுக்ரஹித்தருள வேணும். |