| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3346 | திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பிரானே! உன் திருவடிகளிலே அடிமை செய்கைக்கு இடையூறாய் விஷயாநுபவங்களுக்குப் பாங்கான உடம்பை எனக்குத் தந்தாய்; அதுவே ஹேதுவாகப் பஞ்சேந்திரியங்களும் பெறுக்கவொண்ணாத ஹிம்ஸைகளைச் செய்கின்றன; அவற்றைப் பரிஹரித்தருளவேணும் என்று ஆர்த்தியோடே பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.) 10 | என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய் வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்று கின்றனர் முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10 | முன்,mun - முன்பொரு காலத்திலே பரவை அடைந்து,paravai adainthu - சுடலைக் கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி,amudham konda moorthi - அமுதத்தை யெடுத்து உதவிய ஸ்வாமியே! என் பரம் சுடரே,en param sudare - எனக்கு விதேயனான பரஞ்சோதியே! என்றிப்படி உன்னை நோக்கிக் கூப்பிட்டு உன் இணைதாமரை கட்கு,un inaithamarai kadgu - உனது உபய பாதங்கள் விஷயத்திலே அன்பு உருகிநிற்கு மது நிற்க,anbu uruginirku madhu nirka - அன்பினாலே உருகியிருக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க (அதற்கு விரோதமாக) சுமடு தந்தாய்,sumadu thandhai - ((அதற்கு விரோதமாக) சரீரமாகிற) சும்மாட்டைத் தந்தாயே! (அதனால்) வன் பரங்கள் எடுத்து,van parangal eduthu - பிரபலமான விஷயபாரங்களைச் சுமத்தி ஐவர்,aivar - பஞ்சேந்திரியங்கள் திசை திசை,disai disai - ஒவ்வொரு முலையாக வலித்து,valithu - இழுத்து எற்றுகின்றனர்,etrugindranar - பீடிக்கின்றனர்; ஓ,o! - இது பொறுக்கமுடிய வில்லையே. |