Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3347 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3347திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (இத்திருவாய்மொழியைப் பாடவல்லார்க்கு இந்திரியங்களால் நலிவு படவேண்டிய பாவங்கள் தொலையுமென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11
குணங்கள் கொண்ட,gunangal kondha - ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொண்ட.
மூர்த்தி ஓர் மூவர் ஆய்,moorthi or moovar aay - மும்மூர்த்திகளுமாய்
படைத்து அளித்து கெடுக்கும்,padaitthu alithu kettum - ஸ்வருஷ்டிஸ்திதிகளுமாய்
அப்புண்டரீகம் கொப்பூழ்,appundariyam koppuul - அப்படிப்பட்ட பத்மநாபனாய்
புனல் பள்ளி அப்பனுக்கே,punal palli appanuke - காரண ஜலத்திலே கண்வளர்ந்த பெருமானுக்கு
தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,thondar thondar thondan sadagopan - தாஸாது தாஸராண ஆழ்வார்
சொல் ஆயிரத்துள்,sol aayiraththul - அருளிச் செய்த ஆயிரத்தினுள்
இப் பத்தும்,ip pattum - இப் பத்துப் பாசுரங்களையும்
கங்குலும் பகலும்,Kangulum pagalum - ஸதாகாலமும்
கண்டு பாட வல்லார்,kandu paada vallaar - பொருள் கண்டு பாடவல்லாருடைய
வினை போம்,vinai poam - பாவங்கா தொலைந்துபோம்.