| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3348 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 1 | கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்; ‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்; ‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்; செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1 | செம் கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய், Sem kayal paay neer thiru arangaththai - அழகிய மீன்கள் துள்ளி திருக்காவேரி சயனித்த தருள்பவனே! கங்குலும் பகலும், Kangulum pagalum - இரவும் பகலும் கண் துயில் அறியாள், Kan thuyil ariyaal - கண்ணுறங்கப் பெறுகின்றிலள்; கண்ண நீர் கைகளால் இறைக்கும், Kanna neer kaigalaal iraikkum - கண்ணீரைக் கைகளாலே இறைக்க வேண்டும்படி தாரை தாரையாய்ப் பெருகவிடாநின்றாள்; சங்கு சக்கரங்கள், Sangu chakkarangal - திருவாழி திருச்சங்குகள் இதோ ஸேவை ஸாதிக்கின்றன என்று கை கூப்பும், Endru kai kooppum - என்று சொல்லி அஞ்ஜலி பண்ணி நின்றாள்; தாமரை கண் என்றே தளரும், Thaamarai kan endrae thalarum - (என்னைக் காடக்ஷித்த) தாமரைக் கண்களன்றோ இவை! என்று சொல்லித் தளர்கன்றாள்; உன்னைவிட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும், Unnaivittu engganae tharikken endrum - (பிரானே) உன்னைவிட்டுப் பிரிந்து தரிக்கவும் முடியுமோ? என்கின்றாள்; இரு நிலம், Iru nilam - விஸ்தீர்ணமான பூதலத்தை கை துழவிருக்கும், Kai thuzhavirukkum - கைகளாலே துழாவாநின்றாள் (ஸ்ரீ ரங்காநாதனே!) இவள் திறந்து, Ival thirandhu - இப் பெண்பிள்ளை விஷயத்தில் என் செய்கின்றாய், En seikindraai - ஏது செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறாய்? |