| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3350 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 3 | வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்; வானமே நோக்குமை யாக்கும் ‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்; ‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணனே!’ என்னும்; திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’ இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3 | இறையும் வட்கு இலள், Iraiyum vatku ilal - சிறிதும் வெட்கமில்லா தவளாகி மணிவண்ணா என்னும், Manivanna ennum - நீல மணிவண்ணனே! என்று கூப்பிடா நின்றாள்! வானமே நோக்கும், Vaaname nokkum - (யானைக்கு உதவவந்தாப்போல நமக்கும் உதவ வரக்கூடு மென்று வானத்தையே நோக்குகின்றாள்; மையாக்கும், Maiyaakkum - (எதிர்பார்த்தபடி வந்து தோன்றக் காணாமையினால்) மோஹமடைகின்றாள்; உட்கு உடை அசுரர், Utku udai asurar - வலிமையுடையவர் களான அசுரர்களினுடைய உயிர் எல்லாம் உண்ட, Uyir ellaam undu - பிராணன்களை யெல்லாம் கவர்ந்த ஒருவனே என்னும், Oruvane ennum - அத்விதீயனே! என்கின்றாள்; உள் உருகும், Ul urugum - உள்ளம் நீர்ப்பண்டமாய் உருகப் பெறுகின்றாள்; கட்கு இலீ, Katku ilee - கண்களுக்கு விஷயமாக மாட்டாதவனே! காகுத்தா கண்ணனே, Kaakutha kannane - ஸ்ரீ ராம க்ருஷ்ணாவதாரங்கள் செய்து எல்லார் கண்ணுக்கும் விஷயங்மானவனே! உன்னை காணும் ஆறு அருளாய் என்னும், Unnai kaanum aaru arulaai ennum - உன்னை நான் கண்ணா ரக்காணும் விதம் அருளவேணுமென்கின்றாள்; திண்கொடி மதிள்சூழ் திரு அரங்கக் தாய், Thin kodi madhil soozh thiru arangaththaai - திடமான கொடிகள் விளங்கும் மதிள்களாலே சூழப்பட்ட திருவரங்கத்தில் துயிலும் பெருமானே! இவள் திறந்து, Ival thirandhu - இப் பெண்பிள்ளை விஷயமாக என்செய்திட்டாய், En seithitaai - நீ செய்தது என்னே! |