Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3351 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3351திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 4
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4
இடக்கால் இட்டகையள் ஆய் இருக்கும், Idakkal ittakaiyal aai irukkum - (சில சமயங்களிலே) கையும் காலும் இட்டது இட்டபடியேயிராநின்றாள்;
எழுந்து உலாம், Ezhundhu ulam - எழுந்து உலாவுகின்றாள்;
மயங்கும், Mayangum - மயங்கா நின்றாள்;
கை கூப்பும், Kai kooppum - (அப்படி மயங்கின தசையிலும்) கைகூப்புதல் தவிர் கின்றிலள்;
காதல் கட்டமே என்றுடமே என்று மூர்ச்சிக்கும், Kaadal kattame endrudame endru moorchikkum - (பகவத் விஷயத்திலே) காதலைத் தாங்குவது வெகு கஷ்டமென்று சொல்லி மூர்ச்சை யடைகின்றாள்;
கடல்வண்ணா கடியை காண் என்னும், Kadal vanna kadiyai kaan ennnum - கடல் வண்ணனே! என் விஷயத்தில் நீ கடுமை கொண்டிருக்கின்றாயே! என்கிறாள்;
வட்டம் வாய் நேமி வலம் கையா என்னும், Vattam vaai nemi valam kaiya ennnum - வட்டமான விளிம்பையுடைய திருவாழியை வலத்திரக்கையிலுடையவனெ! என்கிறாள்;
வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidai endru endre mayangum - வாராய் வாராய் என்று பலகாலுமழைத்தும் வரக்காணாது மயங்கு கின்றாள்;
சிட்டனே!, Sittane! - பரமபவித்திரனே!
செழு நீர் திரு அரங்கத்தாய், Sezhuneer thiru arangkaththaai - நீர்வளம் பொருந்திய கோயிலிலே கண்வளர்ந்திரளுமவனே!
இவள் திறத்து, Ival thiraththu - இப்பெண்பிள்ளை விஷயமாக
என்சிந்தித் தாய், Ensindhithaai - நீ சிந்தித்திருப்பது என்ன?