Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3352 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3352திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 5
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5
அந்தி போது, Andhi podhu - மாலைபொழுதிலே
அவுணன் உடல் இடந்தானே, Avunan udal idandhaane - (நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி) இரணியனது உடலைப் பிளந்தவனே!
அலை கடல் கடைந்த ஆர் அமுதே, Alai kadal kadaindha aar amudhe - அலையெறிகின்றகடலை (த்தேவர்களுக்காக)க் கடைந்தா ஆராவமுதமே!
சந்தித்து உன் சரணமே சாலீவது வலித்த தையலே மையல் செய்தானே, Sandhithu un saraname saaleevadhu valitha thaiyale maiyal seithaane - உன்னோடே கலந்து உன் திருவடிகளிலேயே லயிக்கவேணுமென்கிற திடமானஅத்யவ ஸாயங்கொண்ட இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே!
சிந்திக்கும், Sindhikkum - (ஏற்கனவே விதிவசமாக நேர்ந்திருந்த கலவியைப் பற்றிச்) சிந்தனை செய்கின்றாள்;
திசைக்கும், Thisaikkum - அறிவு அழியா நின்றாள்;
தேறும், Therum - (திடீரென்று) தெளிவு பெறுகின்றாள்
கைகூப்பும், Kaikooppum - அஞ்சலி பண்ணாநின்றாள்;
திரு அரங்கத்து உள்ளாய் என்னும், Thiru arangathu ullaai ennum - கோயிலிலே கண்வளர்ந்;தருளுமவனே! என்கிறாள்;
வந்திக்கும், Vandhikkum - தலைவணங்கா நின்றாள்;
ஆங்கே, Aange - அவ்வளவிலே
மழை கண் நீர் மல்க, Mazhai kan neer malga - கண்ணீர் தாரை தாரையாகப் பெருகநின்று
வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidaai endru endre mayangum - (எம்பெருமானே!) வாராய் வாராய் என்று பலகாலுஞ் சொல்லி (வரக்காணாது) மோஹிக்கின்றாள்.