| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3353 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 6 | ‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்; ‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்; ‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்; பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6 | என்னை மையல் செய்து, Ennai maiyal seidhu - என்னை வியாமோஹப்படுத்தி மனம் கவர்ந்தானே யென்னும், Manam kavarndhaane ennum - மனதைக் கொள்ளை கொண்டவனே! என்கிறோள்; மா மாயனே என்னும், Maa maayane ennum - மிகப் பெரிய மாயங்களை யுடையவனே! என்கிறாள்; செய்யவாய் மணியே என்னும், Seyyaavaai maniye ennum - சிவந்த அதரசோபையை உடையயையாக் கொண்டு நீலமணி போன்றவனே; என்கிறாள்; தண் புனல் சூழ் திருஅரங்கத் துள்ளாய் என்னும், Than punal soozh thiru arangath thullaai ennum - குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்த கோயிலில் கண்வளர்ந்தருள் பவனே! என்கிறாள்; வெய்யவான் தண்டு சங்கு சக்கரம்வில் ஏந்தும், Veyyaavaan thandu sangu sakkaram vil endhum - (ஆச்ரித விரோதி விஷயத்தில்) வெப்பமே வடிவெடுத்த பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கிற விண்ணோர் முதல் என்னும், Vinnor mudhal ennum - நிதயஸூரிநாதனே! என்கிறாள்; பை கொள் பாம்பு அணையாய், Pai kol paambu anaiyaai - படமெடுத்த ஆதிசேஷன் மீது சயனித்தருள்பவனே! இவள் திறத்து, Ival thiraththu - இப்பெண்பிள்ளை விஷயமாக பாவியேன் செயல் பாலது , Paaviyen seyal paaladhu - பாவியேனான நான்செய்யக் கூடியது இருந்தால் அதை அருளாய், Arulaai - அருளிச்செய்யவேணும் |