Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3353 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3353திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 6
‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6
என்னை மையல் செய்து, Ennai maiyal seidhu - என்னை வியாமோஹப்படுத்தி
மனம் கவர்ந்தானே யென்னும், Manam kavarndhaane ennum - மனதைக் கொள்ளை கொண்டவனே! என்கிறோள்;
மா மாயனே என்னும், Maa maayane ennum - மிகப் பெரிய மாயங்களை யுடையவனே! என்கிறாள்;
செய்யவாய் மணியே என்னும், Seyyaavaai maniye ennum - சிவந்த அதரசோபையை உடையயையாக் கொண்டு நீலமணி போன்றவனே; என்கிறாள்;
தண் புனல் சூழ் திருஅரங்கத் துள்ளாய் என்னும், Than punal soozh thiru arangath thullaai ennum - குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்த கோயிலில் கண்வளர்ந்தருள் பவனே! என்கிறாள்;
வெய்யவான் தண்டு சங்கு சக்கரம்வில் ஏந்தும், Veyyaavaan thandu sangu sakkaram vil endhum - (ஆச்ரித விரோதி விஷயத்தில்) வெப்பமே வடிவெடுத்த பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கிற
விண்ணோர் முதல் என்னும், Vinnor mudhal ennum - நிதயஸூரிநாதனே! என்கிறாள்;
பை கொள் பாம்பு அணையாய், Pai kol paambu anaiyaai - படமெடுத்த ஆதிசேஷன் மீது சயனித்தருள்பவனே!
இவள் திறத்து, Ival thiraththu - இப்பெண்பிள்ளை விஷயமாக
பாவியேன் செயல் பாலது , Paaviyen seyal paaladhu - பாவியேனான நான்செய்யக் கூடியது இருந்தால் அதை
அருளாய், Arulaai - அருளிச்செய்யவேணும்