| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3354 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 7 | ‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே! கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்; ‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்; கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7 | என்னுடை கோமளம் கொழுந்து, Ennudaiya komalam kolundhu - மிக மெல்லியலாளான என்மகள் பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் என்னும், Paala thunbangal inbangal padaitthaai ennum - அவ்வவ்விடங்களுக்குத் தகுதியாக இன்பங்களையும் துன்பங்களையும் படைத்கவனே! என்கிறாள்: பற்று இலார் பற்ற நின்றானே என்னும், Patru ilaar patra nindraane ennum - அசரண்ய சரண்யனே! என்கிறாள்; கால சக்கரத்தாய் என்னும், Kaala sakkaraththaai ennum - காலசக்ரத்திற்கு நிர்வாஹகனானவனே! என்கிறாள்; கடல் இடம் கொண்ட கடல் வண்ணா என்னும், Kadal idam konda kadal vanna ennum - திருப்பாற் கடலை இடமாகக் கொண்ட கடல்; வண்ணனே! என்கிறாள்; கண்ணனே என்னும், Kannane ennum - ஸ்ரீகிருஷ்ணா என்கிறாள்; சேல் கொள்தண் புனல் சூழ் திருஅரங்கத் தாய் என்னும், Sel kolthan punal soozh thiru arangath thaai ennum - மீன்கள் நிரம்பிய குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்தா கோயிலில் வாற்பவனே! என்கிறாள்; என்தர்த்தானே என்னும், Entharthaane ennum - என்னைப் பவித்திரனாக ஆக்குமவனே! என்கிறாள்; கோலம் மாமழை கண்பனி மல்க் இருக்கும், Kolam maamazhai kanpani malga irukkum - அழகு பொருந்திப் பெருத்துக குளிர்ந்த கண்கள் நீர்பெருகநிற்கின்றாள். |