| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3355 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 8 | கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்; அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்; ‘அஞ்சன வண்ணனே!’ என்னும்; எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்; ‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்; செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்! என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8 | வானவர்கட்கு கொழுந்து என்னும், Vaanavargatku kozhundhu ennum - நித்ய ஸூரிகளுக்குத் தலையானவனே! என்கிறாள்; குன்று ஏந்தி, Kunru endhi - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்று கோ நிரை காத்தவன் என்னும், Ko nirai kaathavan ennum - பசுக்களின் கூட்டத்தைக் காத்திருளினவனே! என்கிறாள்; ஆழும், Aazhum - கண்ணுங் கண்ணீருமாயிருக்கின்றான்; தொழும், Thozhum - அஞ்ஜலி பண்ணா நின்றான்; ஆவி அனல் வெவ்வுயிர்க்கும், Aavi anal vevvuyirkkum - ஆத்மாவஸ்து கொளுந்தும்படி வெப்பமாகப் பெருமூச்சுவிடாநின்றாள்; அஞ்சனம் வண்ணனே என்னும், Anjanam vannane ennum - அஞ்சனனேமனியனே! என்கிறாள்! மேல் எழுந்து நோக்கி, Mel ezundhu nokki - (இக் கூக்குரலைக்கேட்டு நினைத்து) மேலே தலையெடுத்துப் பார்த்து இமைப்பு இலள் இருக்கும், Imaippu illal irukkum - இமையாத கண்ணினளாய் இருக்கின்றாள்; எங்ஙனே நோக்கு கேன் என்னும், Engane nokku ken ennum - எந்த பிரகாரத்தாலே உன்னைக் காண்பேன்? என்கின்றாள்; செழு தடம் புனல் சூழ்திரு அரங்கத் தாய், Sezhu thadam punal soozh thiru arangath thaai - மிகச் சிறந்த தீர்த்தம் கண் வளாந்தருளுமவனே! என் திருமகட்கு, En thiru magatku - பிராட்டியோ டொத்து என் பெண்மகள் விஷயத்திலே என் செய்கேன், En seiken - எதைச் செய்வனே? |