Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3356 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3356திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 9
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9
என் திருமகள் சேர்மார்பனே என்னும், En thirumagal sermaarbane ennum - எனக்குப் புருஷகார பூதையான பிராட்டி சோந்த திருமார்பை யுடையவனே! என்கிறாள்;
என்னுடை ஆவியே என்னும், Ennudai aaviyae ennum - எனக்கு உயிராயிருப்ப வனே! என்கிறாள்;
நின் திருஎயிற்றால் இடந்து நீ கொண்ட , Nin thiru eyirraal idandhu nee konda - உனது கோரப் பற்களாலே இடந்து ஏற்றுக்கொண்ட
நிலம் மகள் கேள்வனே என்னும், Nilam Magal kelvanae ennum - பூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்கிறாள்;
அன்று , Andru - முன் பொருகால்
உரு ஏழும் , uru ezhum - இடிபோன்ற குரலையுடையரிஷபங்களேழையும்
தழுவி, thazhuvi - மதமொழித்து
நீ கொண்ட, nee konda - மணந்து கொண்ட
ஆய் மகள், aai magal - நப்பின்னைப் பிராட்டிக்கு ப்ரியனே! என்கிறாள்;
தென் திருஅரங்கம் கோயில் கொண்டானே, Then thiru arangam koyil kondane - ஸ்ரீ ரங்கநாதனே!
இவள் தனக்கு, Ival thanakku - இவளுக்கு
முடிவு தெளிகிலேன், mudivu thelikilen - ஆர்த்தி முடியுமாறு அறிகின்றிலேன்.