| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3356 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 9 | என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்; ‘என்னுடைய ஆவியே!’ என்னும்; ‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே!’ என்னும்; ‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே!’ என்னும்; தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9 | என் திருமகள் சேர்மார்பனே என்னும், En thirumagal sermaarbane ennum - எனக்குப் புருஷகார பூதையான பிராட்டி சோந்த திருமார்பை யுடையவனே! என்கிறாள்; என்னுடை ஆவியே என்னும், Ennudai aaviyae ennum - எனக்கு உயிராயிருப்ப வனே! என்கிறாள்; நின் திருஎயிற்றால் இடந்து நீ கொண்ட , Nin thiru eyirraal idandhu nee konda - உனது கோரப் பற்களாலே இடந்து ஏற்றுக்கொண்ட நிலம் மகள் கேள்வனே என்னும், Nilam Magal kelvanae ennum - பூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்கிறாள்; அன்று , Andru - முன் பொருகால் உரு ஏழும் , uru ezhum - இடிபோன்ற குரலையுடையரிஷபங்களேழையும் தழுவி, thazhuvi - மதமொழித்து நீ கொண்ட, nee konda - மணந்து கொண்ட ஆய் மகள், aai magal - நப்பின்னைப் பிராட்டிக்கு ப்ரியனே! என்கிறாள்; தென் திருஅரங்கம் கோயில் கொண்டானே, Then thiru arangam koyil kondane - ஸ்ரீ ரங்கநாதனே! இவள் தனக்கு, Ival thanakku - இவளுக்கு முடிவு தெளிகிலேன், mudivu thelikilen - ஆர்த்தி முடியுமாறு அறிகின்றிலேன். |