| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3357 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 10 | ‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்; ‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்; ‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்; அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10 | இவள் , Ival - இப்பெண்பிள்ளையானவள், தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும், thanakku mudivu ondru arikilen ennum - தனது ஆர்த்திக்கு முடிவு ஒன்றும் தெரியவில்லையே! என்கிறாள்; கடி கமழ் கொன்றை சடையனே என்னும், Kadi kamazh kondrai sadaiyane ennum - பரிமளம் மிக்க கொன்றைமாலையைச் சடையிலணித்த சிவனுக்கு அந்தர்யாமியே என்கிறாள்; நான்முகக்கடவுளே என்னும், Naanmuga kadavulae ennum - தன்னோடொத்த வடிவுடையரான நித்ய ஸூரிகளுக்கு நாதனே! என்கிறாள்; வண் திருஅரங்கனே என்னும், Van thiru arangane ennum - ஸ்ரீ ரங்கநாதனே! என்கிறாள்: அடி அடையாதாள் போல் இவள், Adi adaiyaadhal pol ival - திருவடிகளைக் கிட்டமாட்டாள் போலும் என்னும்படி யிருந்த விவள் முகில் வண்ணன் அடி், Mugil vannan adi - மேகவண்ணனான அவனது திருவடிகளை அணுகி அடைந்தனள், anugi adaindhanal - கிட்டியடையப்பெற்றாள். |