| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3358 | திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 11 | முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல் துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன் முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11 | முகில் வண்ணன் அடியை அடைந்து, Mugil vannan adiyai adaindhu - மேகவண்ணனான் எம்பெருமானுடைய திருவடிகளை யடைந்து அருள் சூடி உயந்தவன், Arul soodi uyandhavan - அவனுடைய திருவருளைத் தலைக்கொண்டு உஜ்ஜீவிததவரும், மொய் புனல் பொருநல், Moi punal porunal - உத்தமதீர்த்தனான தாமிரப்ரணியினுடைய துகில் வண்ணம் தூ நீர் சேர்ப்பன், Thugil vannam thoo neer serppan - துகிலின் நிறம்போலே பரிசுத்தமான ஜலத்தின் கரையிலே சேர்ந்திருப்பவரும் வண் பொழில் சூழ் வண் குருகூர், Van pozhil soozh van kurukoor - வளம்மிக்க சோலைகள் சூழந்த திருநகரிக்குத் தலைவருமான் முகில் வண்ணன் அடிமேல் சொன்ன, Mukil vannan adimel sonna - மேகவணணனான எம்பெருமானது திருவடிகளை நோக்தியருளிச் செய்த சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார், Sol maalai aayirathu ippathum vallaar - சொல் தொடையான ஆயிரத்தினுள் இப்பதிகத்தை ஒதவல்லவர்கள் முகில் வண்ணம் வானத்து, Mukil vannam vaanathu - முகில் வண்ணனுடைய நிழலீட்டாலே முகில் வண்ணமாயிருக்கின்ற பரமபதத்திலே இமையவர் சூழ, imaiyavar soozha - நித்தியசூரிகள் புடைசூழ பேர் இன்பம் வெள்ளத்தே, Per inbam vellathe - ப்ரஹமானந்த ப்ரவாஹித்தில் இருப்பர், iruppar - மூழ்கியிருக்கப்பெறுவர்கள். |