Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3364 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3364திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நீங்கள் ஆறி இருக்கும் அளவில்லாத படி எனக்கு அபி நிவேசம் மிகா நின்றது -சடக்கென அங்கே கொண்டு போய் விடுங்கோள்-என்கிறாள்.) 6
காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6
(அன்னைமீர் காள),(Annaimirkal) - தாய்மார்களே!,
நீலம் முகில் வண்ணத்து எம்பெருமான்,Neelam mugil vannathu emberumaan - நீலமேக நிறத்தனான எம்பெருமான்
முன்னே வந்து நிற்கும்,Munne vandhu nirgum - என் கண்முன்னே வந்து நிற்பதாகக் காண்மின்றான்; (ஆனால்)
என் கைக்கும் எய்தான்,En kaikkum eydhaan - என் கைக்கு எட்டாதபடி தூரஸ்தானாகவே யிராநின்றாள்;
காதல் கடலின்மிக பெரியது,Kaadhal kadal inmiga periyadhu - எனது காதலோ வென்னில் கடலிற் காடடிலும்மிகவும் பெரியதாக வுள்ளது;
ஆல்,Aal - அந்தோ!;
அவன்,Avan - அப்பெருமான்
ஞாலத்து வந்து வீற்றிருந்த,Nyaalathu vandhu veettrirundha - இந்நிலவுலகத்தில் வந்து எழுந்தருளியிருக்கு மிடமாய்
நால் மறையாளரும் வேள்வி ஓவா,Naal maraiyaalarum velvi ova - நான்கு வேதங்களையும் கரை கண்டவர்கள் வைதிகாநுஷ்டானங்களை நிரந்தரமாக நிகழ்த்துமிடமாய்
கோலம் செந்நெற்கள் கவரி வீசும்,Koolam chennetrukkaal kavari veesum - அழகிய செந்நெற்பயிர்கள் கவரிபோலே அசையப் பெற்றதாய்
கூடு புனல்,Koodu punal - தீர்த்த ஸம்ருத்தயையு டையதான்
திருப்பேரெயிற்கே –,Thiruppereikke – - திருப்பேரெயில் தலத்திற்கே
காலம் பெற என்னை காட்டுமின்கள்,Kaalam pera ennai kaattumingal - சீக்கிமாக என்னைக் கொண்டு போய்க் காட்டுங்கள்.