Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3365 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3365திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (நங்காய்! உனக்கு அவன் பக்கலுள்ள ஆசாபாசம் அளவுகடந்திருந்தாலும் அவனே யெழுந்தருளுமளவும் இங்கேயிருக்க ப்ராப்தமேயல்லது அங்குச் செல்லுகை யுக்தமனறென்று தோழி சொல்ல, அதற்கு விடையிறுக்கிறது இப்பாசுரம்.) 7
பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7
பேர் எயில் சூழ்,Per eyil sooel - பெரிய மதில்களாலே சூழப்பட்டு
கடல்,Kadal - கடலிடத்தே யுள்ளதான
தென் இலங்கை,Then ilankai - தென்னிலங்காபுரியை
செற்ற,Sera - நீறாக்கி யொழித்த
பிரான்,Piran - எம்பெருமான்
வந்து வீற்றிருந்த,Vandhu veettrirundha - வந்து எழுந்தருளியிருக்குமிடமான
பேர் எயிற்கே,Per eyirke - திருப்பெரெயில் தலத்திற்கே
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது
புக்கு,Pukku - புகுந்து
நாடி,Naadi - அவனைத் தேடி
பேர்த்து எங்கும் வரகாண மாட்டேன்,Perthu engum varakaana maattean - மீண்டு ஒரிடத்திற்கும் வரக்காணேன்:
தோழி –!.,Thozhi –!. - வாராய் தோழியே
இனி இங்கு யாரை உடையம்,Ini ingu yaarai udaiyam - இனி இந்நிலைமையில் யாரைக் துணையாக வுடையோம்?
என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,En nenjam koova vallaarum illai - (என்னை விட்டுப்போன) எனது நெஞ்சை அழைத்துத் தரவல்லாருமில்லை;
இனி,Ini - நெஞ்சம் உதவாதே நீயும் தளர்ந்தபின்பு
ஆரை கொண்டு என்சாதிக் கின்றது,Arai kondu enchaadikindradhu - யாரைத் துணைகொண்டு என்ன பிரயோஜனம் ஸாதிக்கத் தக்கதாயிருக்கின்றது? (ஒன்று மில்லையே.)
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேன்,En nenjam kandadhuvae kandeen - (ஆகையாலே) எனது நெஞ்சு கண்ட விஷயத்தையே நானும் கடைப்படித்தேன்.