Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3367 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3367திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் பிரளய ஆபத் சகனானவன் வர்த்திக்கிற தேசத்திலே சென்று புகத் தவிரேன் – நீங்கள் என்னைத் தேற்றி யுரைக்கிற இதுக்கு பிரயோஜனம் இல்லை என்று தோழிமாரையும் தாய்மாரையும் பார்த்துச் சொல்லுகிறாள்.) 9
சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9
என்னுடைய தோழிமீர்காள்,Ennudaiya thozhimeerkal - எனக்கு ஹிதஞ் சொல்லுகின்ற தோழிமார்களே!
அன்னையர்காள்,Annaiyarkal - (அப்படிப்பட்ட) தாய்மார்களே!
என்னை தேற்றவேண்டா,Ennai thettravenda - (எல்லை கடந்த) என்னைத் தேற்றுவதில் நீங்கள் முயல வேண்டா
இதற்கு,Idharku - எனது இந்த நிலைமைக்கு
நீர்கள் உரைக்கின்றது என்,Neerkal uraikkindradhu en - நீங்கள் சொல்லக்கூடிய வார்த்தை என்ன இருக்கிறது?
எனக்கு நெஞ்சும் நிறைவும் இங்குஇல்லை,Enakku nenjum niraiyum inguillai - எனது நெஞ்சும் அடக்கம் முதலிய குணங்களும்; இங்கில்லை யன்றோ; (ஆதலால்)
கார் வண்ணன்,Kaar vannan - நீல வண்ணனும்
கார் கடல் ஞாலம்; உண்ட,Kaar kadal nyaalam; unda - கருங்கடல் சூழ்ந்த ஜகத்தை (ப்ரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனுமான
கண்ண பிரான்,Kann piran - ஸ்ரீக்ருஷ்ணபகவான்
வலது வீற்றிருந்த,Valathu veettrirundha - நித்ய ஸந்நிதி பண்ணியிருக்குமிடமாய்
ஏர் வளம்,Aer valam - ஏரினுடைய மிகுதியை யுடைத்தாய்
ஒண் கழனி பழனம்,On kalanipazhanam - அழகிய கழனிகளையும் நீர்நிலங்களையுமுடைத்தான
தென் திரு பேர் எயில்மா நகர்,Then thiru peer eyilma nagar - தென்திருப்பேரெயிலென்கிற திருப்பதியை
சென்று சேர்வேன்,Sendru saerven - சென்று சேரக்கடவேன்.