| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3368 | திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -இருந்ததே குடியாக உன்னைப் பழி சொல்லாரோ -என்று தோழிமார் சொல்ல அவர்களை யன்றோ நான் தேடித் திரிகிறது என்கிறாள்.) 10 | நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்! சிகர மணி நெடு மாட நீடு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்று வரை யன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10 | என் தோழி மீர்காள்,En thozhi meerkal - எனது தோழிகளே! சிகரம் மணி நெழுமாடம்,Sikaram mani nezhumadam - மணிரசளையுடைத்தாய் மணிமயமாய் ஒங்கின மாடங்களையுடைத்தாய் நீடு,Needu - நெடுங்காலம் விளங்கு மதான தென் திருப்பேரெயில் வீற்றிருந்த,Then thiruppeer eyil veettrindha - தென் திருப்பேரைப்பதியிலே எழுந்தருளியிருக்கின்ற மாயன்,Maayan - ஆச்சர்யகுண சேஷ்டி தங்களையுடையனாய் அன்று,Andru - பாரதயுத்தம் நடந்தவக் காலத்தில் நூற்றுவரை,Noorruvarai - துரியோதநன் முதலிய நூறுபோர்களை மங்க நூற்ற,Manga nootru - தொலையும்படி ஸங்கல் தவனும் நிகர் இல் முகில் வண்ணன்,Nikar il mugil vannan - ஒப்பற்ற காளமேக வண்ணனும் நேமியான்,Nemiyaan - திருவாழியை யுடையனுமான மகரநெடுங்குழைக்காதன்,Makara nedungkuzhaikaadhan - மகரபூஷணப் பெருமான் என்நெஞ்சம் கவர்ந்து,En nenjam kavarnthu - எனது நெஞ்சை அபஹரித்துக் கொண்டு எனை ஊழியான்,Enai oozhiyaan - எத்தனை காலத்தான்! (அவன் என் னெஞ்சைக் கவர்ந்தது இன்று நேற்றோ?) நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்,Nagaramum naadum piravum thaerven - (ஆனபின்பு) நகரங்களிலும் நாடுகளிலும் மற்றுமுள்ள விடங்களிலும் (நானே சென்று ஆராயக்கடவேன்;) எனக்கு நாண் இல்லை,Enakku naan illai - அதுபற்றி எனக்கு லஜ்ஜையில்லே |