| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3370 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 1 | ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1 | aazhi ezha,ஆழி எழ - திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும் sangum villum ezha,சங்கும் வில்லும் எழ - பாஞ்சஜந்யமும் சார்ங்கமும் தோன்றவும் thandum vaalum ezha,தண்டும் வாளும் எழ - கதையும் நந்தகமும் தோன்றவும் thisai vaazhi ezha,திசை வாழி எழ - திசைகள் தோறும் மங்களாசாஸன கோஷம் கிளம்புவும் andam mozhai ezha,அண்டம் மோழைஎழ - (உயரவளர்ந்தபடியாலே) அண்டகபாலம் பிளந்து ஆவரணஜலம் குமிழி கிளம்பும் படியாகவும் mudi paadham ezha,முடி பாதம் எழ - (வளர்ந்த விரைவாலே) திருமுடியும் திருவடியும் ஒக்கக்கிளம்பும் படியாகவும் oozhi ezha,ஊழி எழ - மாவலியால் துன்பப் பட்டகாலம் போய்) நல்லகாலம் வந்து தோற்றும்படியாகவும் appan,அப்பன் - ஸர்வேச்வரன் ulagam kondaa aaru eyy,உலகம் கொண்ட ஆறு ஏ - (திரிவிக்கிரமனாய்) உலகங்களையளந்து கொண்டபடி என்னே!. |