Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3371 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3371திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 2
ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2
appan,அப்பன் - ஸர்வேச்வரன்
saaru pada,சாறு பட - (தேவர்களுக்கு) மஹோத்ஸவமுண்டாம்படியாக
amudham konda nanru,அமுதம் கொண்ட நான்று - (கடல் கடைந்து) அமுதங்கொண்ட காலத்திலே.
aaru,ஆறு - கடலிலே சென்று சேர்வதற்காக வந்து கொண்டிருந்த) ஆறுகளானவை
malaikku edhiruthu oadum oli,மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி - தங்கள் பிறப்பிடமான மலைகளையே நோக்கித் திரும்பியோடுகிறஓலியும்.
aravu ooru sulaay,அரவு ஊறு சுலாய் - வாஸீகியென்கிற பாம்பினுடம்பைச் சுற்றி
malai theykkum oli,மலை தேய்க்கும் ஓலி - மந்தர மலையிலே தேய்க்கிற (ஓலியும்
kadal maaru sulandru,கடல் மாறு சுழன்று - கடலானது இடம் வலமாக மாறிச் சுழன்று
alaikkindra oli,அழைக்கின்ற ஒலி - கோஷிக்கிற கோஷமும் உண்டாயின.