Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3372 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3372திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 3
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3
appan,அப்பன் - ஸர்வேச்வரன்
oondri idandhu eittril kondan naal,ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள் - (பிராளயங்கதையான பூமியைக்) குத்தியிடந்தெடுத்து எயிற்றின் மேலே கொண்ட காலத்தில்
ezhu mannum,ஏழ் மண்ணும் - ஏழு தீவுகளான பூமி பேதங்களானவை
naantril,நான்றில - நழுவாதவையாய்
thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன;
pinnum,பின்னும் - மேலும்
ezhu malai,ஏழ் மலை - ஸப்த குலாசங்களும்)
naantril,நான்றில - சலியாதவையாகி
thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன;
pinnum,பின்னும் - மேலும்
ezhu kadal,ஏழ் கடல் - ஸப்த ஸாகரங்களும்
naanaril,நானறில - உடைந்தொழுகாதவையாய்
thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன.
eyy,ஏ - ஆச்சரியம்