| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3375 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 6 | போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா மலை கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6 | pozhndhu melindha,போழ்ந்து மெலிந்த - போதுபோனவாறே pun chekkaril,புன் செக்கரில் - செக்கர் வானமிடுகிற வளவிலே vaan thisai,வான் திசை - ஆகாசமும் திக்குக்களும் soolum ezundhu,சூழும் எழுந்து - சூழக்கிளம்பி udhiram punal aa,உதிரம் புனல் ஆ - ரத்த வெள்ளமாம்படி appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான நரஸிம்ஹமூர்த்தி aazh thuyar seydhu,ஆழ் துயர் செய்து - அளவிறந்த துன்பத்தை விளைந்து asurai kollum aaru,அசுரை கொல்லும் ஆறு - இரணியாசுரனைக் கொன்ற விதமானது malai keelthu pilandha singam otthadhu,மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்தது - ஒரு மலையைக் கீழேயிட்டு அதன் மேலேயிருந்து அம்மலையைக்கீண்ட சிங்கம் போன்றிருந்தது. aal,ஆல் - ஆச்சரியம். |