Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3375 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3375திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 6
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6
pozhndhu melindha,போழ்ந்து மெலிந்த - போதுபோனவாறே
pun chekkaril,புன் செக்கரில் - செக்கர் வானமிடுகிற வளவிலே
vaan thisai,வான் திசை - ஆகாசமும் திக்குக்களும்
soolum ezundhu,சூழும் எழுந்து - சூழக்கிளம்பி
udhiram punal aa,உதிரம் புனல் ஆ - ரத்த வெள்ளமாம்படி
appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான நரஸிம்ஹமூர்த்தி
aazh thuyar seydhu,ஆழ் துயர் செய்து - அளவிறந்த துன்பத்தை விளைந்து
asurai kollum aaru,அசுரை கொல்லும் ஆறு - இரணியாசுரனைக் கொன்ற விதமானது
malai keelthu pilandha singam otthadhu,மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்தது - ஒரு மலையைக் கீழேயிட்டு அதன் மேலேயிருந்து அம்மலையைக்கீண்ட சிங்கம் போன்றிருந்தது.
aal,ஆல் - ஆச்சரியம்.