| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3377 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 8 | நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும் நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8 | appan,அப்பன் - ஸ்வாமியான கண்ண பிரான் ner sari vaanan,நேர் சரி வாணன் - முதுகுகாட்டியொடின பாணாஸுரனுடைய thinthol konda anru,திண்தோள் கொண்ட அன்று - திண்ணிய தோள்களைத்துணித்து வென்றி கொண்ட அக்காலத்திலே kozhi kodi kondaan,கோழி கொடி கொண்டான் - மயிலைக் கொடியாகக் கொண்ட ஸீப்ரமணியன் ner sarindhaan,நேர் சரிந்தான் - எதிர்நில்லாமல் சாய்ந்துபோனான்; pinnum,பின்னும் - அதற்குமேலே eriyum analon,எரியும் அனலோன் - ஜ்வலித்துக்கொண்டிருந்த அக்நியும் ner sarindhaan,நேர் சரிந்தான் - எதிர் நில்லாமல் சரிந்தான்; pinnum,பின்னும் - அதற்குமேலும் mukkan mooruthi,முக்கண் மூர்த்தி - முக்கண்ணனான சிவ பிரானும் ner sarindhaan kandeer,நேர் சரிந்தான் கண்டீர் - அப்படியே முதுகிட்டுப்போனான கிடீர். |