திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3379 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3379திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 10
மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10
பதவுரை Show / Hide
meynirai,மேய்நிரை - மேய்கிற பசுக்களானவை
keel puga,கீழ் புக - கீழே யொதுங்கும்படியாகவும்
maa purala,மா புரள - (கீழது மேலதாக மலையைப் பிடிக்கையாலே மலையிலுள்ள) மிருசங்கள் புரண்டுவிழும் படியாகவும்
sunaivaa nirai neer,சுனைவாய் நிறை நீர் - சுனைகளினுடைய வாயளவும் நிறைந்த நீரானது
pilirisoriya,பிளிறி சொரிய - பெரிய ஆரவாரத்தோடு சொரியும் படியாகவும்
inam aanirai paadi ange oadungga,இனம் ஆநிரை பாடி அங்கே ஓடுங்க - மிகவும் ஸம்ருத்தமான திருவாய்ப்பாடியானது அங்கே அடங்கும்படியாகவும்
appan,அப்பன் - கண்ணபிரான்
thee mazhai kaathu,தீ மழை காத்து - விநாச ஹேதுவான மழையைத் தடுக்க
kunṟam eduthaan,குன்றம் எடுத்தான் - கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கினான்