| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3379 | திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 10 | மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10 | meynirai,மேய்நிரை - மேய்கிற பசுக்களானவை keel puga,கீழ் புக - கீழே யொதுங்கும்படியாகவும் maa purala,மா புரள - (கீழது மேலதாக மலையைப் பிடிக்கையாலே மலையிலுள்ள) மிருசங்கள் புரண்டுவிழும் படியாகவும் sunaivaa nirai neer,சுனைவாய் நிறை நீர் - சுனைகளினுடைய வாயளவும் நிறைந்த நீரானது pilirisoriya,பிளிறி சொரிய - பெரிய ஆரவாரத்தோடு சொரியும் படியாகவும் inam aanirai paadi ange oadungga,இனம் ஆநிரை பாடி அங்கே ஓடுங்க - மிகவும் ஸம்ருத்தமான திருவாய்ப்பாடியானது அங்கே அடங்கும்படியாகவும் appan,அப்பன் - கண்ணபிரான் thee mazhai kaathu,தீ மழை காத்து - விநாச ஹேதுவான மழையைத் தடுக்க kunṟam eduthaan,குன்றம் எடுத்தான் - கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கினான் |