| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3382 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அங்கு உண்டான சகல சேதனரையும் தன்னை அல்லது அறியாத படி தன் குணத்தால் பந்தித்து அகப்படுத்தி வைத்து -அவர்களை இட்டு வைத்து தானே எழுந்து அருளாதே அவர்களையும் கூடக் கொண்டு திரு நாட்டிலே எழுந்து அருளினான் என்று கீழ் சொன்னதில் காட்டிலும் அதிக குணத்தை அருளிச் செய்கிறார்.) 2 | நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ? நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2 | நாட்டில் பிறந்தது,Naattil pirandathu - (தன்வாசியறியாத) இக்கொடிய வுலகத்திலே வந்து பிறந்தது படாதனபட்டு,Padaadhanapattu - ஸம்ஸாரிகளும் அநுபவியாத கிலேசங்களையநுபவித்து மனிசர்க்கு ஆ,Manisarkku aa - செய்தநன்றியறியாத மனிசர்களுக்காக நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு,Naattai naliyum arakkarai naadi thandhittu - உலகத்தை ஹிம்ஸிக்கின்ற ராவணாதி ராக்ஷ்ஸர்களை ஆராய்ந்து சென்று கொன்று நாட்டை அளித்து,Naattai aliththu - (இப்படியாக) நாட்டைரக்ஷித்து உய்ய செய்து,Uyya seyythu - உஜ்ஜீவனப்படுத்தி நடந்தமை கேட்டும்,Nadandamai kaettum - பின்பு திருநாட்டுக்கு நடந்த படியைக் கேட்டிருந்தும் நாட்டில் பிறந்தவர்,Naattil pirandhavar - (அப்பெருமானுடைய திருக்குணங்கள் நடையாடுகிற) நாட்டிலே பிறந்தவர்கள் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ,Naaranarkku aal anri aavaro - நாராயணனான அந்த ஸ்ரீராமனுக்கல்லது மற்றொருவர்க்கு ஆட்படுவர்களோ? |