| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3387 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (தேவதாந்தர பஜநம் பண்ணிக் கிடந்த மார்க்கண்டேயனை விஷயீதரித்தலாகிற மஹா குணத்தை யநுஸந்தித்தால் அப்பெருமானுக்கன்றி யாளாவரோ வென்கிறார்.) 7 | கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ? வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள் இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக் கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7 | வண்டு உண் மலர் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு,Vandu un malar thongal maarkkandeyanukku - வண்டுகள் மதுபானம் பண்ணுகிற பூமாலையையுடைய (பாலகனான) மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள்,Vaalum naal - ஆயளுக்காக இண்டை சடை முடி ஈசன்,Indai sadai mudi eesaan - நிபிடமான ஜடாமண்டலத்தையுடையவரான சிவபிரான் உடன் கொண்டு உசா செல்ல அங்கு,Udan konda ushaa sellu anggu - தன்னோடுகூட அவனை யழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே செல்ல அந்நிலையிலே கொண்டு,Konda - அவனை விஷயீகரித்து தன்னோடும் கொண்டு,Thannodum konda - தன்னோடே கூட்டிக் கொண்டு உடன் சென்றது,Udan sendradhathu - பிரியாதே யிருந்த படியை உணர்ந்தும்,Unarnthum - புராணாதி முகத்தாலேயறிந்தும் கண்டும் தெளிந்தும் கற்றார்,Kandum thulindhum katraar - கண்ணாரக் கண்டும் நெஞ்சாரத்தெளிந்தும் கற்றவர்கள் கண்ணற்கு அன்றி ஆள் ஆவரோ?,Kannarkku anri aal aavaro? - கண்ணபிரானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரோ |