திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 3390 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3390திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ஸர்வதர்மாந் பரித்யஜ்ய இத்யாதி சரமச்லோக மருளிச்செய்த மஹாதுணத்திலே யீடுபட்டுப் பேசுகிறார்.) 10
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ? போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10
பதவுரை Show / Hide
வார்த்தை அறிபவர்,Vaarthai aripavar - சரமச்லோகமாகிற நல்வார்த்தையை யறியும்வர்கள்.
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை பேர்த்து,Poortha pirappodu noyodu muppodu irappu ivai perthu - ஸ்வருபவிளக்கத்தை மறைக்கின்ற பிறப்பு வியாதி கிழத்தனம் மரணம் முதலான வற்றை விட்டுக் கழியும்படி பண்ணி
பெரு துன்பம் வேர் அற நீக்கி,Peru thunbam veer ariya neekki - கைவல்யாநுபவமாகிற மஹாநர்த்தத்திலும் புகாமே காத்து
தன் தாளின் கீழ் சேர்த்து,Than thaalin keezh seyththu - தன்னுடைய திருவடிகளின் கீழே சேர்த்துக்கொண்டு
அவன் செய்யும் சேமத்தை எண்ணி,Avan seyyum semaththai enni - இப்படியாக அவன் செய்தருளும் ஸீக்ஷ்மங்களை யநுஸந்தித்து
தெளிவு கூற்று,Thulivu koottru - தெளிவு பெற்று வைத்து
மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ,Maayavarku anri aal aavaro - அப்பெருமானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரொ?