| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3390 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ஸர்வதர்மாந் பரித்யஜ்ய இத்யாதி சரமச்லோக மருளிச்செய்த மஹாதுணத்திலே யீடுபட்டுப் பேசுகிறார்.) 10 | வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ? போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10 | வார்த்தை அறிபவர்,Vaarthai aripavar - சரமச்லோகமாகிற நல்வார்த்தையை யறியும்வர்கள். போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை பேர்த்து,Poortha pirappodu noyodu muppodu irappu ivai perthu - ஸ்வருபவிளக்கத்தை மறைக்கின்ற பிறப்பு வியாதி கிழத்தனம் மரணம் முதலான வற்றை விட்டுக் கழியும்படி பண்ணி பெரு துன்பம் வேர் அற நீக்கி,Peru thunbam veer ariya neekki - கைவல்யாநுபவமாகிற மஹாநர்த்தத்திலும் புகாமே காத்து தன் தாளின் கீழ் சேர்த்து,Than thaalin keezh seyththu - தன்னுடைய திருவடிகளின் கீழே சேர்த்துக்கொண்டு அவன் செய்யும் சேமத்தை எண்ணி,Avan seyyum semaththai enni - இப்படியாக அவன் செய்தருளும் ஸீக்ஷ்மங்களை யநுஸந்தித்து தெளிவு கூற்று,Thulivu koottru - தெளிவு பெற்று வைத்து மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ,Maayavarku anri aal aavaro - அப்பெருமானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரொ? |