| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3391 | திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (இத்திருவாய்மொழியைக் கற்பவர்கள் இவ்விருள்தரு மாஞாலத்தில் இருக்கச் செய்தேயும் தெளிந்த சிந்தையராயிருப்பர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11 | தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல் தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர் தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11 | தெளிவு உற்று,Thelivu uttru - ஸ்வரூபத்தில் தெளிவு பெற்று வீவு இன்றி நின்றவர்க்கு,Veivu indri nindruvargu - அந்தத் தெளிவுக்கு ஒரு நாளும் விச்சேதமில்லாமலிருப்பவர்களுக்கு இன்பம் கதி செய்யம்,Inbam kathi seyyam - இன்பமே வடிவெடுத்ததான கதியைச் செய்விப்பவனாய் தெளிவு உற்ற கண்ணனை,Thelivu uttru kannanai - தெளிவு தானே வடிவெடுத்திருப்பவனான எம்பெருமானைக் குறித்து தென் குருகூர் சடகோபன் சொல்,Then Kurukoor Sadagopan sol - ஆழ்வார் அருளிச்செய்ததான தெளிவு உற்ற ஆயிரத்துள்,Thelivu uttru ayiraththul - தெளிந்த ஆயிரத்தினுள்ளை இவை பத்தும் வல்லார் அவர்,Ivai pattum vallar avar - இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள் பா மரு மூஉலகத்துள்ளே,Pa maru mooulagaththule - பாபபூயிஷ்டமான உலகத்திலிருந்துவைத்தே தெளிவு உற்ற சிந்தையர்,Thelivu uttru chintaiyar - தெளிவு பெற்ற மனமுடையராவர். |