Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3392 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3392திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஒவ்வோரவயத்தாலும் ஒவ்வோர் அதிமாநுஷ சேஷ்டிதத்தைச் செய்தருளின் பரம போக்யனான வுன்னை நான் என்றைக்குக் கிட்டுவதென்கிறார்.) 1
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1
பாமரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓ,Pamaru mooulagum padaitta parpanaba o - பலவகைப் பொருள்களும் நிரம்பியுள்ள மூவுலங்களையுமுண்டாக்கின ஓ பத்ம நாபனே!
பாமரு மூ உலகும் அளந்த பற்பம் பாதா ஓ,Pa maru moo ulagum alandha param pada o - பரம்பின மூவுலங்களையு மளந்து கொண்ட திருவடித்தாமரைகளை யுடையவனே!
தாமரை கண்ணா ஓ,Thamarai kannaa o - செந்தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனே!
தனியேன் தனி ஆளா ஓ,Thaniyena tani aala o - துணையற்றவனான என்னை அஸாதாரணமாக ஆள்பவனே!
தாமரை கையா ஓ,Thamarai kaiyaa o - செந்தாமரைக் கையனே!
உன்னை சேர்வது என்று கொல்,Unnai sera vadhu endru kol - உன்னை நான் சேரப் பெறுவது எந்நாளோ?