| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3395 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸர்வ ஸ்மாத் பரனாய் ஆஸ்ரித பவ்யனாய் போக்யதை அளவிறந்திருப்பவனான வுன்னை அகிஞ்சநனான நான் எங்கே கிட்டுவதென்கிறார்.) 4 | எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4 | கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைகோவலனே,Kongu alar than am thuzhai mudhi ennutai kovalane - மதுவோடு கூடி மலர்ந்த செவ்வித் துழாயையணிந்த மயிர்முடியையுடையனாய் எனக்குப் பரம போக்யனான கோபாலக்ருஷ்ணனே!, எழில் மூ உலகும் நீயே,Ezil moo ulagum neeye - விலக்ஷ்ணமான மூவுலகமும் நீயிட்ட வழக்காயிருக்கும், அங்கு உயர் முக்கண் பிரான்,Angu uyarr mukkan piran - அந்த லோகத்திலே உயர்ந்தவனான சிவ பிரானும் பிரமன் பெருமான் அவன்,Braman peruman avan - அப்படிப்பட்ட நான் முகக்கடவுளும் நீ,Nee - நீயிட்ட வழக்காயிருப்பர்கள். வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன முதலா தெய்வம் நீ,Vem kadhir vachchiram kai indhiran muthala deivam nee - வெவ்விய பிரதாபம் பொருந்திய வஜ்ராயுதத்தைக் கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீயிட்ட வழக்கே; நான் எங்கு தலைப்பெய்வன்,Naan engu thalaippeivan - (ஆனபின்பு) நான் என் முயற்சியினாலேயே உன்னை வந்து கிட்டுவேனோ? |