திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3396 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3396திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) ( லௌகிக விஷயங்களிலே கைகழிந்திருக்கிற என் ஆக்மா உன்னை எங்ஙனே கிட்டக்கடவதென்கிறார். ஈடு;- “பலன் உம்மதான பின்பு நீரும் சிறிது யத்நம் பண்ணவேணுங்காணுமென்ன: நீ ஸ்ருஷ்டித்த லோகங்களில் விஷயங்கள் தோறும் அகப்பட்டுக்கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒருஸாதனத்தை யநுஷ்டித்துவந்து பெறுகையென்று ஒன்றுண்டோ வென்கிறார்.) 5
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே! உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5
பதவுரை Show / Hide
என்னுடை கோவலனே!,Ennutai kovalane! - என்னுடையவனென்று அபிமானிக்கலாம் படியான கோபாலனே!,
என் பொல்லா கரு மாணிக்கமே,En polla karu maanikkame - துளையாத மாணிக்கம் போன்று எனக்கு இனியனாவனே!
என்னுடை ஆருயிரார்,Ennutai aaruyiraar - என் ஆத்மாவானவர்,
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும்,Unnutai undhi malar ulagam avai moondrum - உனது திருநாபியிலே மலர்ந்த மூவுலகங்களிலுமுள்ள விஷயங்களெல்லாவற்றலும்
பரந்து,Parandhu - சாபல்யப்பட்டிருந்து.
உன்னுடை சோதி வெள்ளத்து அகம்போல் உன்னை,Unnutai sothi vellathu agampol unnaik kandu kondu - உனக்கே யஸாதாரணமாய் விலக்ஷ்ண தேஜோராசி ரூபமாயிருக்கிற ஸ்ரீவைகுண்டலோகத்திலே யிருக்கிறவுன்னை
கண்டு கொண்டிட்டு,kandu kondittu - காணப்பெறுமாறு
எங்ஙனே கொல் வந்து எய்துவர்,Enggane kol vandhu edhvar - எப்படி வந்து சேருவர்?