Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3397 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3397திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (உன்னைப் பெறுகைக்கு என்பக்கல் ஒர் உபாயமில்லை; நீயே வந்து விஷயீகரிக்கவேணுமென்கிறார்.0 6
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6
மல்கு நீலம் சுடர் தழைப்ப,Malgu neelam sudar thalaippa - குறைவற்ற நீலமான புகரானது மேன் மேலும் வளர,
செம் சுடர் சோதிகள் பூத்த ஒரு மாணிக்கம் சேர்வது போல்,Sem sudar sodhigal pootha oru maanikkam sera vadhu pol - சிவந்த வொளியை யுடைத்தான சில கிரணங்களைப் பரப்பினவொரு மாணிக்கம், சாய்ந்து கிடக்குமாபோலே,
அந்தரம் மேல்,Antharam mel - திருவரை மேல்சாத்தின
செம் படடோடு,Sem padatodu - பீதாம்பரத்தோடு
அடி உந்தி கை மார்பு கணவாய்,Adi undhi kai maarpu kanavaay - திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருப்பவளமுமாகிய வொளி
செம் சுடர் சோதிவிட,Sem sudar sodhividu - சிவந்தழகிய வொளியைப் பரப்ப
உறை என் திருமார்,Urai en thirumaar - எனது திருமாலை
வந்து எய்தும் ஆறு அறியேன்,Vandhu eydhum aaru ariyen - வந்து கிட்டும் வகையறிகின்றிலேன்.