திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3397 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3397திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (உன்னைப் பெறுகைக்கு என்பக்கல் ஒர் உபாயமில்லை; நீயே வந்து விஷயீகரிக்கவேணுமென்கிறார்.0 6
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச் செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6
பதவுரை Show / Hide
மல்கு நீலம் சுடர் தழைப்ப,Malgu neelam sudar thalaippa - குறைவற்ற நீலமான புகரானது மேன் மேலும் வளர,
செம் சுடர் சோதிகள் பூத்த ஒரு மாணிக்கம் சேர்வது போல்,Sem sudar sodhigal pootha oru maanikkam sera vadhu pol - சிவந்த வொளியை யுடைத்தான சில கிரணங்களைப் பரப்பினவொரு மாணிக்கம், சாய்ந்து கிடக்குமாபோலே,
அந்தரம் மேல்,Antharam mel - திருவரை மேல்சாத்தின
செம் படடோடு,Sem padatodu - பீதாம்பரத்தோடு
அடி உந்தி கை மார்பு கணவாய்,Adi undhi kai maarpu kanavaay - திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருப்பவளமுமாகிய வொளி
செம் சுடர் சோதிவிட,Sem sudar sodhividu - சிவந்தழகிய வொளியைப் பரப்ப
உறை என் திருமார்,Urai en thirumaar - எனது திருமாலை
வந்து எய்தும் ஆறு அறியேன்,Vandhu eydhum aaru ariyen - வந்து கிட்டும் வகையறிகின்றிலேன்.