Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3398 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3398திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ப்ரஹ்மாதிகள் உடைய போக்ய ஜாதமும் அவர்களுடைய அதி மானுஷ வ்ருத்திகளும் ஸ்வ அதீனமான இருக்கிறவனை நான் காணப் பெறேனோ -என்கிறார்.) 7
என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7
என் திரு மார்பன் தன்னை,En thiru maarban thannai - திருமாலாயிருக்கிற தன்மையை எனக்கு ப்ரகாசிப்பித்தவனும்
என் மலை மகள் கூறன் தன்னை,En malai magal kooran thannai - பார்வதீபதியை ப்ரகாரமாகவுடையனாயிருக்கிறபடியை யெனக்கு ப்ரகாசிப்பித்தவனும்
என்றும் நாமகளை அகம்யால் கொண்ட என் நான் முகனை,Endrum naamagalai agamyaa'l kondha en naan mukanai - எப்போதும் ஸரஸ்வநியை அந்தரங்க மஹிஷியாகக் கொண்ட நான்முகனை ப்ரகாரமாவுடை யனாயிருக்கிறபடியை எனக்கு ப்ரகாசிப்பித்தவனும்.
நின்ற சசீ பதியை,Nindra Sasi padhiyai - இவர்களோடு எண்ணப்பட்டு நிற்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியானவனும்
நிலம் கீண்ட,Nilam keennda - (மஹாவராஹமாகி) பூமியை யுத்தரித்தவனும்
மூன்று எயில் எரித்த,Moontru eyil eritha - த்ரிபுரதஹனம பண்ணினவனும்
புலன் வென்று துரந்த,Pulan vendru thurandha - இந்திரியங்களை ஜயித்து ஓட்டினவனும்
விசும்பு ஆளியை,Visumpu aaliyai - சுவர்க்கத்தை ஆள்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியுமான எம்பெருமானை
காணனோ –,Kaanaano - காணமாட்டேனோ?