Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3399 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3399திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (மாலி மூதலான ப்ரதிகூலவர்க்கத்தை நிரஸித்தருளின ஸர்வேச்வரானைக் காணப்பெறுவோமோ! என்கிறார்.) 8
ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8
ஆளியை காண்பரி ஆய்,Aaliyai kaanpari aay - யாளியைக் கண்ட குதிரை போலவும்
அரி காண் நாஜீ ஆய்,Ari kaan Naajee aay - சிங்கத்தைக் கண்ட நாஜீ போலவும்
அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்கன்
அன்று ஊளையிட்டு,Andru oolaiyittu - அக்காலத்தில் அச்சத்தினாலே கதறிக்கொண்டு
இலங்கை கடந்து,Ilankai kandhu - லங்காபுரியை விட்டு
பிலம் புக்கு ஒளிப்ப,Pilam pukku olibpa - பாதாளத்திலே புகுந்து ஒளிக்கும் படியாக
மீளி அம் புள்ளை கடாய்,Meeli am pullai kadaay - பெருமிடுக்கனாய் அழகியவனான கருடனை நடத்தி
விறல் மாலியை கொன்று,Viral maaliyai kondru - பிரபலனான மாலியைக் கொன்று
பின்னும்,Pinnu - அவ்வளவிலும் விடாதே
ஆள்,Aal - மிகவும் சூரர்களான ஆண் புலிகளை (க்கொன்று)
உயர் குன்றங்கள் செய்து,Uyar kunrangal seydhu - பருப்பருந்த மலைகளாகக் குவித்து
அடர்த்தானையும்,Adarthaanaiyum - அவர்களை யழித்த பெருமானையும்
காண்டும் கொல் ஒ,Kaandum kol o - காணப்பெறுவோமோ?