| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3399 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (மாலி மூதலான ப்ரதிகூலவர்க்கத்தை நிரஸித்தருளின ஸர்வேச்வரானைக் காணப்பெறுவோமோ! என்கிறார்.) 8 | ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8 | ஆளியை காண்பரி ஆய்,Aaliyai kaanpari aay - யாளியைக் கண்ட குதிரை போலவும் அரி காண் நாஜீ ஆய்,Ari kaan Naajee aay - சிங்கத்தைக் கண்ட நாஜீ போலவும் அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்கன் அன்று ஊளையிட்டு,Andru oolaiyittu - அக்காலத்தில் அச்சத்தினாலே கதறிக்கொண்டு இலங்கை கடந்து,Ilankai kandhu - லங்காபுரியை விட்டு பிலம் புக்கு ஒளிப்ப,Pilam pukku olibpa - பாதாளத்திலே புகுந்து ஒளிக்கும் படியாக மீளி அம் புள்ளை கடாய்,Meeli am pullai kadaay - பெருமிடுக்கனாய் அழகியவனான கருடனை நடத்தி விறல் மாலியை கொன்று,Viral maaliyai kondru - பிரபலனான மாலியைக் கொன்று பின்னும்,Pinnu - அவ்வளவிலும் விடாதே ஆள்,Aal - மிகவும் சூரர்களான ஆண் புலிகளை (க்கொன்று) உயர் குன்றங்கள் செய்து,Uyar kunrangal seydhu - பருப்பருந்த மலைகளாகக் குவித்து அடர்த்தானையும்,Adarthaanaiyum - அவர்களை யழித்த பெருமானையும் காண்டும் கொல் ஒ,Kaandum kol o - காணப்பெறுவோமோ? |