| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3400 | திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (விபீஷண பக்ஷ்பாதத்தாலே ராவண குலத்தை நிச்சேஷமாக முடித்து அவனுக்கு லங்காராஜ்யத்தையுங் கொடுத்துத் தானும் அபிஷிக்தனாய் ராஜ்யம் பண்ணித் தன்னடிச்சோதியேற் வெடுந்தருளின் ஸ்ரீராமபிரானை, அந்த மேன்மையோடே யிருக்கச் செய்தே நாம் காணவல்லோமோ நெஞ்சமே! என்று தமது திருவுள்ளத்தை நோக்கியருளிச் செய்கிறார்.) 9 | காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும் ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9 | நெஞ்சமே,Nenjame - மனமே! கடிய வினையே முயலும்,Kadiya vinaiye muyalum - மிகக் கொடிய பரஹிம்ஸா ரூபமான தீவினைகளிலேயே முயற்சி செய்பவனாய் ஆண்,Aan - பௌருஷம் மிக்கவனாய் திறல்,Thiral - வீர சூர பராக்ரமசாலியாய் மீளி,Meeli - சிங்கம் போன்றவனாய் மொய்ம்பின்,Moimpin - பெருமிடுக்கையுடையனான அரக்கன்,Arakkan - இராவணனென்னும் ராக்ஷ்ஸனுடைய குலத்தை,Kulaththai - குடும்பத்தை தடிந்து,Tadindhu - தொலைத்திட்டு மீண்டும்,Meendum - பின்னையும் அவன் தம் பிக்கே,Avan tham pikke - அவனுடன் பிறந்தவனான விபீஷணழ்வானுக்கே விங் நீர் இலங்கை அருளி,Ving neer ilankai aruli - கடலிடத்துள்ள லங்காராஜ்யத்தை யருள் செய்து ஆண்டு,Aandu - அயோதயையி லெழுந்தருளி நெடுங்காலம் அரசு புரிந்து தன் சோதி புக்க,Than sodhi pukka - தன்னடிச் சோதியான பரமபதத்திலே சென்று சேர்ந்த அமரர் அரி ஏற்றினை,Amarar ari yattrinai - நித்யஸீரிநாதனான பெருமானை காண்டும் கொல் ஒ,Kaandum kol o - காணப்பெறுவோமோ |