Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3402 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3402திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (இத்திருவாய்மொழி கற்றார் மதிமுகமடந்தையர் லிரும்பிப் பல்லாண்டு பாடி ஸத்கரிக்கும்படியான பெருமையைப் பெறுவர்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.) 11
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11
அ அரி உரு ஆய புக்கு,A ari uru aaya pukku - அப்படிப்பட்ட சிங்க வடிவையுடையனாய்த் தோன்றி
அவுணன் உடல் கீண்டு உகந்த,Avunan udal keenndu ugandha - இரணியாசுரனுடைய உடலே இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்த
சக்கரம் செல்வன்,Chakkaram selvan - திருவாழியையுடைய திருமாலைக் குறித்து
குருகூர் சட கோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - ஆழ்வார் அருளிச் செய்த
மிக்க ஓர் ஆயிரத்துள்,Mikka or aayiraththul - மிகச் சிறந்த ஆயிரத்தினுள்ளே
இவை பத்தும் வல்லாரவரை,Ivai pattum vallaaravari - இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்களை
ஏழையா,Ezhaiya - திருநாட்டிலுள்ள திவ்யாப்ஸரஸ்ஸுக்கள்
தொக்கு,Tokku - திரள் திரளாக விருந்து
பல்லாண்டு இசைத்து,Pallaandu isaithu - மங்களாசாஸனம் பண்ணி
கவரி செய்வர்,Kavari seyvar - சாமரை வீசுதல் முதலிய கிஞ்சி காரங்களைச் செய்பவர்கள்.