| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3403 | திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (எம்பெருமானுடைய திருக்கண்களிலிருந்து வந்து தன்னை நலிகின்றபடியைப் பேசுகிறாள்.) 1 | ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன் ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன் சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர் தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1 | தோழியர்காள்,Thozhiyar kaal - தோழிமார்களே! அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே! ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம் கொலோ,Yezhaiyar aavi unnum inai kootram kolo - பெண் பிறந்தாருடைய உயிரை முடிக்கவல்ல இரண்டு ம்ருத்யுக்களோ இவை! அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்; (அன்றியே) ஆழி அம் கண்ணபிரான்,Aali am kannapiraan - கடல் வண்ணனான கண்ண பிரானுடைய திரு கண்கள் கொலோ,Thiru kangal kolo - திருக்கண்கள்தானோ! அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்; தாமரை நாள் மலர் போல்,Thaamarai naal malar pol - அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலே வந்து தோன்றும் கண்டீர்,Vandhu thondrum kandir - வந்து தோன்றா நின்றன காண்மின்; துயராட்டியேன் என் செய்கேன்,Thuyar aatiyen en seyken - துயருறுகின்ற நான் (துயர் தீர்வதற்கு) என்ன செய்வேன்? |