Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3403 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3403திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (எம்பெருமானுடைய திருக்கண்களிலிருந்து வந்து தன்னை நலிகின்றபடியைப் பேசுகிறாள்.) 1
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1
தோழியர்காள்,Thozhiyar kaal - தோழிமார்களே!
அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே!
ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம் கொலோ,Yezhaiyar aavi unnum inai kootram kolo - பெண் பிறந்தாருடைய உயிரை முடிக்கவல்ல இரண்டு ம்ருத்யுக்களோ இவை!
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்; (அன்றியே)
ஆழி அம் கண்ணபிரான்,Aali am kannapiraan - கடல் வண்ணனான கண்ண பிரானுடைய
திரு கண்கள் கொலோ,Thiru kangal kolo - திருக்கண்கள்தானோ!
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்;
தாமரை நாள் மலர் போல்,Thaamarai naal malar pol - அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலே
வந்து தோன்றும் கண்டீர்,Vandhu thondrum kandir - வந்து தோன்றா நின்றன காண்மின்;
துயராட்டியேன் என் செய்கேன்,Thuyar aatiyen en seyken - துயருறுகின்ற நான் (துயர் தீர்வதற்கு) என்ன செய்வேன்?