| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3404 | திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (கண்ணழகு நலிந்தது போராமே மூக்கழகுன் நலியும்படியைச் சொல்லியழுகிறாள்.) 2 | ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்? மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2 | அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே! நீர்,Neer - நீங்கள் என்னை ஆட்டியும் தூற்றியும் நின்று,Ennai aattiyum thootriyum nindru - என்னை யலைத்தும் அலர் தூற்றியும் நின்று நலிந்து என்,Nalinthu en - நலிகிறவிதனால் என்ன பலனுண்டு? மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ,Maadu uyar karbakathin vallio kolundho - (அக்கண்களின்) அருகே ஓங்கியிருப்பதொரு கற்பகத்தினுடைய கொடியோ கொழுந்தோ! அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்; ஈட்டியவெண்ணெய் உண்டான் திருமூக்கு,Ettiya vennney undaan thirumukku - திரட்டி வைத்திருந்த வெண்ணெயை (க்களவு வழியாலே) அமுது செய்த கண்ணனுடைய திருமூக்கானது எனது ஆவி உள்ளே,Enadhu aavi ullae - எனது நெஞ்சினுள்ளே மாட்டிய,Maattiya - ஏற்றிய வாலியது வல் விளக்கின் சுடர் ஆய் நிற்கும்,Vaaliyadhu val vilakkin sudar aay nirkum - பெருத்து ஸ்திரமான தீப ஜ்வாலே போலே விளங்காநின்றது. |