Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3404 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3404திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (கண்ணழகு நலிந்தது போராமே மூக்கழகுன் நலியும்படியைச் சொல்லியழுகிறாள்.) 2
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2
அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே!
நீர்,Neer - நீங்கள்
என்னை ஆட்டியும் தூற்றியும் நின்று,Ennai aattiyum thootriyum nindru - என்னை யலைத்தும் அலர் தூற்றியும் நின்று
நலிந்து என்,Nalinthu en - நலிகிறவிதனால் என்ன பலனுண்டு?
மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ,Maadu uyar karbakathin vallio kolundho - (அக்கண்களின்) அருகே ஓங்கியிருப்பதொரு கற்பகத்தினுடைய கொடியோ கொழுந்தோ!
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்;
ஈட்டியவெண்ணெய் உண்டான் திருமூக்கு,Ettiya vennney undaan thirumukku - திரட்டி வைத்திருந்த வெண்ணெயை (க்களவு வழியாலே) அமுது செய்த கண்ணனுடைய திருமூக்கானது
எனது ஆவி உள்ளே,Enadhu aavi ullae - எனது நெஞ்சினுள்ளே
மாட்டிய,Maattiya - ஏற்றிய
வாலியது வல் விளக்கின் சுடர் ஆய் நிற்கும்,Vaaliyadhu val vilakkin sudar aay nirkum - பெருத்து ஸ்திரமான தீப ஜ்வாலே போலே விளங்காநின்றது.