| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3406 | திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருப்பவளத்தில் அழகு தன்னை நலிகிற படியை சொல்கிறாள்.) 4 | இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல் மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன் தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4 | இன் உயிர்க்கு,In uyirkku - இனிமையான உயிரைக் கவர்வதற்காக ஏழையர் மேல் வளையும்,Ezhaiyar mel valaiyum - பெண்பிறந்தார் மேலேதானே வளைந்து நலிவதான நீலம் இணைவில் கொல்,Neelam inaivil kol - நீல நிறத்தையுடைய இரண்டு விற்களோ? மன்னிய சீர் மதனன்,Manniya seer madanan - அழியாவழகடையனான மன்மதனுடைய கரும்பு சிலை கொல்,Karumbu silai kol - கரும்பமயமான வில்தானோ? ம நனன் தன் உயிர் தாதை கண்ணன் பெருமான்,Ma nanan than uyir thaathai kannan perumaan - மன்மதனுக்கு அபிமதனான் பிதாவாகிய கண்ணபிரானுடைய புருவம் அவையே,Puruvam avaiye - அந்தத் திருப்புருவங்களே என் உயிர் மேலன ஆய்,En uyir melana aay - எனது உயிரையே கணிசித்து என்றும் நின்றே அடுகின்றன்,Endrum nindrae adukindran - என்றும் ஒருபடிப்பட நின்று நலியாநின்றன. |