| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3407 | திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (எம்பெருமானுடைய புன்முறுவலின் அழகு வந்து நலிகிற படியைக் கூறுகின்றாள்.) 5 | என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்? அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன் குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5 | என்றும் நின்றே திகழும்,Endrum nindrae thigazhum - எப்போதும் ஒருபடிப்பட நின்று விளங்கும் தாய் செய்ய சுடர் ஈன்,Seyya sudar een - சிவந்த சுடரை வெளிப்படுத்து மதான வெண் மின் கொல்,Ven min kol - வெண்ணிறமான மின்னலோ! அன்றி,Andri - அல்லது என் ஆவி அடும் அணி முத்தம் கொலோ,En aavi adum ani muththam kolo - என்னுயிரை மாய்க்கின்ற அழகிய முத்துநிரையோ!; அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்; குன்றம் எடுத்த பிரான் முறுவல்,Kunram edutha piran muruval - கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்த பெருமானுடைய மந்த ஹாஸமானது எனது ஆவி அடும்,Enadhu aavi adum - என் ஆத்மாவைத் தபியாநின்றது; அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே! எனக்கு உய்வு இடம்,Enakku uyvu idam - நான் பிழைக்கு முபாயம் ஒன்றும் அறிகின்றிலேன்,Ondrum arikindrilen - சிறிதும் அறிகிறேனில்லை. |