Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3408 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3408திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (அவனுடைய திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்.) 6
உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6
ஏழையாக்கும்,Ezhaiyaakkum - பெண்டுகளுக்கும்
அசுரர்க்கும் அரக்கர் கட்கும்,Asurarkkum arakkar kadkum - அஸூர ராக்ஷஸர்களுக்கும்
உய்வு இடம் எவ்விடம் என்று இலங்கி,Uyvu idam evvidam endru ilangi - பிழைக்கும் வரது ஏது? என்னும்படி விளங்கிக் கொண்டு
மகரம் தழைக்கும் தளிர்கொல்,Makaram thalaikkum thalir kol - மகரவடிவமாய்த் தழைத்த சில தளிர்களோ?
பை விடம் பாம்பு அணையான்,Pai vidam paampu anaiyaan - படமெடுப்பதும் விஷத்தைக்குவதுமான பாம்பைக் படுக்கை யாகவுடைய பெருமானுடைய
திரு குண்டலம்,Thiru kundalam - திருமகர குண்டலங்களை யுடைய காதுகள் தானே
கைவிடல் ஒன்றும் இன்றி,Kaividal ondrum indri - ஒய்வில்லாமல் நிரந்தரமாக
அடுகின்றன,Adukindran - நலியாநின்றன;
காண்மின்கள்,Kaanmingal - காணுகோள்.