| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3408 | திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (அவனுடைய திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்.) 6 | உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்? பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6 | ஏழையாக்கும்,Ezhaiyaakkum - பெண்டுகளுக்கும் அசுரர்க்கும் அரக்கர் கட்கும்,Asurarkkum arakkar kadkum - அஸூர ராக்ஷஸர்களுக்கும் உய்வு இடம் எவ்விடம் என்று இலங்கி,Uyvu idam evvidam endru ilangi - பிழைக்கும் வரது ஏது? என்னும்படி விளங்கிக் கொண்டு மகரம் தழைக்கும் தளிர்கொல்,Makaram thalaikkum thalir kol - மகரவடிவமாய்த் தழைத்த சில தளிர்களோ? பை விடம் பாம்பு அணையான்,Pai vidam paampu anaiyaan - படமெடுப்பதும் விஷத்தைக்குவதுமான பாம்பைக் படுக்கை யாகவுடைய பெருமானுடைய திரு குண்டலம்,Thiru kundalam - திருமகர குண்டலங்களை யுடைய காதுகள் தானே கைவிடல் ஒன்றும் இன்றி,Kaividal ondrum indri - ஒய்வில்லாமல் நிரந்தரமாக அடுகின்றன,Adukindran - நலியாநின்றன; காண்மின்கள்,Kaanmingal - காணுகோள். |