| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3409 | திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருநெற்றியினழகுவந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள். அவ்வழகை எல்லார்க்கும் காட்டவேணுமென்றும், அதைக்கண்டு தான் படுகிற பாட்டை எல்லாரும் படவேணுமென்றும் இவளுக்கு ஆசையுள்ளது.) 7 | காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்! நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல் சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே? கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7 | அன்னையர் காள காண்மின்கள் என்று,Annaiyar kaala kaanmingal endru - தாய்மார்களே! காணுங்கோள் என்று சொல்லி காட்டும் வகை அறியேன்,Kaattum vakai arien - (உங்களுக்குக்) காட்டும் வித மறிகின்றிலேன்; நாள் மன்னு வெண் திங்கள் கொல்,Naal mannu ven thingal kol - பூர்வ பக்ஷ்த்து அஷ்டமீசந்திரனோ! நயந்தார் கட்கு நஞ்சு இலை கொல்,Nayanthar kadku nanju ilai kol - ஆசைப்பட்டவர்களுக்கு நஞ்சாயிருப்பதொரு இல்லையோ! சண் மன்னுநால் தட தோள் பெருமான் தன்,Shan mannunaal thada thol perumaan than - உயர்த்தி பொருந்திய நான்கு பருத்த திருத்தோள்களையுடைய எம்பெருமானது திரு நுதலே,Thiru nuthale - திரு நெற்றியே கோள் மன்னி,Kol manni - மிடுக்குப் பொருத்தி கொடியேன் உயிர் கோள் இழைத்து,Kodiyaen uyir kol izhaithu - பாவியான வென்னுடைய பிராணனே முடிக்கையிலே துணிந்து ஆவி அடும்,Aavi adum - என் ஆத்மாவை நலியாநின்றது. |