| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3411 | திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருக்கழல் வந்து நலிகிற படியைச் சொல்லுகிறாள்.) 9 | கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல் விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக் கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9 | கொள்கின்ற கோள் இருளை,Kolkindra kol irulai - உலகத்தை யெல்லாம் வியாபிக்கின்ற மிடுக்கையுடைய இருளை சுகிர்ந்திட்ட கொழு சுருளின்,Sukirnditta kolu surulin - பன்னிப் பன்னிச் சுருட்டப்பெற்ற சிறந்தவொரு சுருளினுடைய உள் கொண்ட நீலம் நல்நூல் தழை கொல்,Ul konda neelam nalnul thazhai kol - (கையழுக்குப்படாமல்) உள்ளே நூற்கப்பட்ட நீல நிறத்தையுடைய அழகிய நூல்திரளோ! அன்று,Andru - அதுவென்று, அதுவன்று; திருக்குழல் கற்றை என்றிவ்வளவே சொல்லத்தகுமத்தனை; (அத்திருக்குழலானது) விள்கின்ற பூ தண்துழாய் விரை நாறவந்து,Vilkindra poo thandhulai virai naaravandhu - அலர்ந்தழகிய குளிர்ந்த திருத்துழாயின் பரிமளம் வீசும்படிவந்து என்; உயிரை,En uyirai - என் ஆத்மாவை கள்கின்ற ஆறு,Kalkindra aaru - கொள்ளை கொள்ளும் விதந்தை அன்னைமீர் அறியீர்,Annaimeer ariyeer - தாய்மார்களே! நீங்கள் அறிகிறீர்களில்லை; கழறா நிற்றிர்,Kalaraa nittrir - வீணாக் ஏதேனுமொன்றைச் சொல்லிப் பொடிகின்றீர்களே! |