| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3412 | திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருவபிஷேகத்தினழக்கிலே என்னுற்றமகப்பட்டது. இனியென்னைப் பொடிந்து உங்களுக்கொரு பலனில்லையென்று திண்ணிதாகப் பேசித் தலைக்கட்டுகிறாள். இப்படி வெட்டிதாகச் சொல்லாவிடில் அவர்கள் விடார்கள் போலேயிருந்து; ஆகவே வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லி முடிக்கிறாள்.) 10 | நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர் சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய் முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10 | அன்னை மீர்,Annaimeer - தாய்மார்களே! நீர்,Neer - நீங்கள் என்னை,Ennai - என்னைக் குறித்து முற்றத்துள்,Mutrathul - (பெண்ணே!) கூசாமல் முற்றத்திலே வந்து நிற்கிறாயே! என்று அதட்டி நேரித்த கையர் ஆய் சுற்றியும் சூழந்தும்,Neritha kaiyar aai suttriyum soozhandhum - கையை நேரித்துக் கொண்டு வைதிர்,Vaidhir - நிந்திக்கின்றீர்கள்; சுடர் சோதி மணி நிறம் ஆய்,Sudar sothi mani niram aai - சுடராய்ப் பரம்பின வொளியையுடைத்தான ரத்னங்களினுடைய நிறத்தை யுடைத்தாய்க் கொண்டு இம் மூவுலகு முற்றவும் விரிகின்ற,Im moovulagu mutravum virikindra - உலகமடங்கலும் வியாபிக்கிற சுடர்,Sudar - தேஜஸ்ஸையுடைத்தான முடிக்கே,Mudikke - திருவபிஷேகத்தின் பக்கலிலேயே உள்ளம் ஒற்றுமை கொண்டது,Ullam otrimai kondadhu - எனது நெஞ்சானது ஒருமைப்பட்டது; நுங்கட்கு நசை என்,Nungatku nasai en - இனி உங்களுக்கு என் பக்கலில் ஆசை வீண்தான். |