Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3412 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3412திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருவபிஷேகத்தினழக்கிலே என்னுற்றமகப்பட்டது. இனியென்னைப் பொடிந்து உங்களுக்கொரு பலனில்லையென்று திண்ணிதாகப் பேசித் தலைக்கட்டுகிறாள். இப்படி வெட்டிதாகச் சொல்லாவிடில் அவர்கள் விடார்கள் போலேயிருந்து; ஆகவே வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லி முடிக்கிறாள்.) 10
நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10
அன்னை மீர்,Annaimeer - தாய்மார்களே!
நீர்,Neer - நீங்கள்
என்னை,Ennai - என்னைக் குறித்து
முற்றத்துள்,Mutrathul - (பெண்ணே!) கூசாமல் முற்றத்திலே வந்து நிற்கிறாயே! என்று அதட்டி
நேரித்த கையர் ஆய் சுற்றியும் சூழந்தும்,Neritha kaiyar aai suttriyum soozhandhum - கையை நேரித்துக் கொண்டு
வைதிர்,Vaidhir - நிந்திக்கின்றீர்கள்;
சுடர் சோதி மணி நிறம் ஆய்,Sudar sothi mani niram aai - சுடராய்ப் பரம்பின வொளியையுடைத்தான ரத்னங்களினுடைய நிறத்தை யுடைத்தாய்க் கொண்டு
இம் மூவுலகு முற்றவும் விரிகின்ற,Im moovulagu mutravum virikindra - உலகமடங்கலும் வியாபிக்கிற
சுடர்,Sudar - தேஜஸ்ஸையுடைத்தான
முடிக்கே,Mudikke - திருவபிஷேகத்தின் பக்கலிலேயே
உள்ளம் ஒற்றுமை கொண்டது,Ullam otrimai kondadhu - எனது நெஞ்சானது ஒருமைப்பட்டது;
நுங்கட்கு நசை என்,Nungatku nasai en - இனி உங்களுக்கு என் பக்கலில் ஆசை வீண்தான்.